அதிக சீட் கேட்டு அதிமுகவுக்கு பாஜக நெருக்கடி தரவில்லை - நயினார் நாகேந்திரன்

 
annamalai nainar nagendran annamalai nainar nagendran

பாஜகவை பொறுத்தவரை  எங்கள் கூட்டணியில் எந்த நெருக்கடியும் கிடையாது, நாங்கள் சுதந்திரமாக செயல்படுவோம், தொகுதி எண்ணிக்கை எங்களுக்கு முக்கியமல்ல யார் முதலமைச்சராக இருக்கக் கூடாது என்பதுதான் முக்கியம் என தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

nainar

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கல்லாலங்குடி மைதானத்தில் தமிழ்நாடு பாஜக தன்னார்வ தொண்டு நிறுவனம்  பிரிவின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன், “நாளை எடப்பாடி பழனிசாமி சந்திக்கப் போகிறேன். ஏற்கனவே பாமக கூட்டணியில் வந்துள்ளது. எங்களை நிறைய பேர் கேள்வி கேட்டார்கள். உங்களை விட்டு நிறைய பேர் பிரிந்து போகிறார்களே என்று... எல்லாமே நல்லபடியாக நடக்கும் என்று சொல்லி இருந்தேன். அதன் முதல் கட்டமாக தற்பொழுது பாமக அன்புமணி ராமதாஸ் கூட்டணியில் இணைந்துள்ளார். 

எடப்பாடி பழனிசாமி இது குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசிவிட்டு வந்துள்ளார். மேலும் நானும் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசி அடுத்த கட்ட நடவடிக்கைகளை என்னவென்று பார்ப்போம். பாஜகவை பொறுத்தவரை  எங்கள் கூட்டணியில் எந்த நெருக்கடியும் கிடையாது, நாங்கள் சுதந்திரமாக செயல்படுவோம். தொகுதி எண்ணிக்கை எங்களுக்கு முக்கியமல்ல, யார் முதலமைச்சராக இருக்கக் கூடாது என்பதுதான் முக்கியம். ராமதாஸ் கருத்திற்கு நான் தற்போது கருத்து கூற முடியாது. அதிமுகவில் ஓபிஎஸ்சை சேர்ப்பது குறித்தும் நான் கருத்து சொல்ல முடியாது. இதற்கு முன்பு நிறைய படங்களுக்கு தணிக்கை சான்று கிடைக்காமல் காலதாமதம் ஆகி உள்ளது. அதற்காக ஒரு பிரதமர் மோடியை சொல்ல முடியாது. சென்சார் போர்டு ஒன்று இருக்கிறது, அதில் தான் என்னவென்று பார்க்கணுமே தவிர எடுத்த உடனே மோடியை குற்றம் சுமத்த முடியாது” என்றார்.