ஒரு சிலர் விலகியதால் கட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை - வானதி சீனிவாசன் பேட்டி

 
vanathi srinivasan

பாஜகவில் இருந்து ஒரு சிலர் விலகியதால் கட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை என பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் கூறியுள்ளார். 

தமிழக பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு ( IT Wing) தலைவராக பொறுப்பு வகித்து வந்த நிர்மல் குமார் கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.  இதேபோல் தமிழ்நாடு பாஜக தகவல் தொழில்நுட்ப செயலாளர் திலீப் கண்ணன், பாஜகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். அறிவு சார் பிரிவின் முன்னாள் மாநில செயலாளர் கிருஷ்ணன், திருச்சி புறநகர் மாவட்ட துணைத் தலைவர் விஜய் ஆகியோர் அதிமுகவில் இணைந்தனர். மேலும் பாஜக ஓபிசி அணியின் மாநில செயலாளர் ஜோதி அதிமுகவில் இணைந்தார். நிர்மல் குமார் தலைமையில், ஜோதி உள்ளிட்ட தமிழக பாஜக நிர்வாகிகள் பலர் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.  பாஜகவில் இருந்து ராஜினாமா செய்த அனைவரும் அண்ணாமலை மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து சென்றுள்ளனர். அடுத்தடுத்து பாஜக நிர்வாகிகள் விலகுவது அக்கட்சி தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

bjp and eps

இந்நிலையில், கோவையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக எம்.எல்.ஏ வானதி ஸ்ரீனிவாசன் கூறியதாவது: பாஜகவில் இருந்து ஒரு சிலர் விலகியதால் கட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை. இன்னும் பலர் பாஜகவில் இணைவார்கள். ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட அரசியல் காரணங்கள் இருக்கலாம். பாஜக அணைத்து மாவட்டங்களிலும் வேகமாக வளர்ந்து வருகிறது. இவ்வாறு கூறினார்.