அதிமுகவுடன் தொடர் மோதல்... தேசிய ஜனநாயக கூட்டணியில் சிக்கல்? - வானதி சீனிவாசன் பேட்டி

 
vanathi srinivasan

ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா விவகாரத்தில் தனிப்பட்ட சுயலாபத்துக்காக ஆளுநர் மீது பழி சுமத்தக்கூடாது என பாஜக எம்.எல்.ஏ.வானதி சீனிவாசன் கூறியுள்ளார். 

கோவை தெற்கு தொகுதி பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: அ.தி.மு.க.வின் அடுத்தக்கட்ட தலைவர்கள், பா.ஜ.க. நிர்வாகிகள் இடையே கருத்து மோதல் இருந்து வருகிறது. இது தேசிய ஜனநாயக கூட்டணியில் சிக்கலை உருவாக்கும். இதுதொடர்பான தகவல்கள் தேசிய தலைமைக்கு தெரிவிக்கப்பட்டு கடந்த வாரம் ஜே.பி.நட்டா கிருஷ்ணகிரி வந்தபோது அனைத்து பா.ஜ.க. தலைவர்களையும் அழைத்து இனிமேல் இதுபோன்ற எந்த விரும்பத்தகாத சம்பவங்களும் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற அறிவுரைகளை அளித்துள்ளார். வரும் காலத்தில் இவையெல்லாம் சரியாகி விடும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்பது தான் பா.ஜ.க.வின் நிலைப்பாடு. இதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தை கொண்டு வரும்போது இந்த சட்டத்தில் உள்ள பிரச்சினைகள், நீதிமன்றத்தில் செல்லுபடியாகுமா என்பது போன்ற கேள்விகளை தான் ஆளுநர் கேட்டுள்ளார். உண்மை நிலையை புரிந்துகொண்டு மக்களை பாதுகாக்க வேண்டிய விஷயத்தில் தனிப்பட்ட சுயலாபத்துக்காக ஆளுநர் மீது பழி சுமத்தக்கூடாது. அரசு இதனை கவுரவ பிரச்சினையாக பார்க்காமல் ஆளுநர் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்து சட்டத்தை பலமாக கொண்டு வர கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு கூறினார்.