நீதி வழங்க வேண்டிய முதலமைச்சரே நீதிமன்றம் சென்றால் எப்படி? - நயினார் நாகேந்திரன் கேள்வி

 
nainar


வக்பு மசோதா தொடர்பான முதலமைச்சரின் அறிவிப்புக்கு பா.ஜ.க எதிர்ப்பு தெரிவித்து பாஜக எம்.எல்.ஏக்கள் தமிழக சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். 

வக்பு சட்டத்திருத்தம் தொடர்பாக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், நாடாளுமன்ற மக்களவையில் வக்பு சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது கண்டனத்துக்குரியது. வக்பு சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும். வக்பு சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக தமிழ்நாடு நிச்சயம் போராடும் - வெற்றியும் பெறும்.வக்பு சட்டத்திருத்தத்தை மக்களவையில் நிறைவேற்றியதை கண்டித்து இன்று கருப்பு பேட்ஜ் அணிந்து வந்துள்ளோம். எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை மீறி நள்ளிரவு 2 மணியளவில் வக்பு சட்டத்திருத்தத்தை நிறைவேற்றியுள்ளார்கள் என கூறினார். 

இந்த நிலையில்,, நீதி வழங்க வேண்டிய முதலமைச்சரே நீதிமன்றம் சென்றால் எப்படி? என பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பினார். வக்பு மசோதா தொடர்பான முதலமைச்சரின் அறிவிப்புக்கு பா.ஜ.க எதிர்ப்பு தெரிவித்து பாஜக எம்.எல்.ஏக்கள் தமிழக சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன், சட்டமன்றத்தில் முதலமைச்சர் கோஷம்  எழுப்புவது இது தான் முதல் முறை. நீதி வழங்க வேண்டிய முதலமைச்சரே நீதிமன்றம் சென்றால் எப்படி? என கூறினார்.