விஜயும், சீமானும் பாஜகவின் பிள்ளைகள் என்றால் திருமாவளவன் யாரின் பிள்ளை?- குஷ்பு

 
விஜயும், சீமானும் பாஜகவின் பிள்ளைகள் என்றால் திருமாவளவன் யாரின் பிள்ளை? விஜயும், சீமானும் பாஜகவின் பிள்ளைகள் என்றால் திருமாவளவன் யாரின் பிள்ளை?

விஜயும், சீமானும் பாஜகவின் பிள்ளைகள் என்றால் திருமாவளவன் யாரின் பிள்ளை? திமுகவின் பிள்ளையா? காங்கிரசின் பிள்ளையா? என பாஜக மாநில துணைத்தலைவர் குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை பட்டினம்பாக்கம் சீனிவாசபுரம் கடற்கரையில் 21 ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக தமிழக பாஜக சார்பாக சுனாமியால் உயிரிழந்த நபர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மாநில துணை தலைவர் குஷ்பு மற்றும் மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் உயிரிழந்த நபர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கடலில் பால் ஊற்றியும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர். பின்னர் மீனவ மக்களுக்கு  உணவுகளை வழங்கினர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில துணை தலைவர் குஷ்பு, “டிசம்பர் 26 ஆம் தேதி யாராலும் மறக்க முடியாத நாள்,அனைவரும் உறங்கி கொண்டு இருந்த நேரம் சுனாமி வந்ததில் அத்தனை மக்கள் உயிரிழந்தனர்.உயிரிழந்த நபர்களுக்கு பாஜக சார்பாக அஞ்சலி செலுத்தினோம். மேலும் கடலோர வாழும் மீனவர் மக்களுக்கு உணவு வழங்கினோம். மேலும் மீனவர்களின் பாதுகாப்புக்காக பிரதமர் மோடி பல திட்டங்களை கொண்டு வந்துள்ளார்.மீனவர்கள் நலனுக்காக பாஜக தொடர்ந்து பாடும்.

விசிக தலைவர் திருமாவளவன் Mind set இதுதான், இதுவே கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் ரம்ஜான் பண்டிகை கொண்டாடினால் எய்ம்ஸ் மருத்துவமனை வந்துவிடுமா என கூற முடியுமா?  இந்து மெஜாரிட்டி அதிகமாக உள்ளதால் தொடர்ந்து மண்டையில் கொட்டிக் கொண்டே இருக்கிறார்கள். அவர்களது கூட்டணியில் இருப்பவர்கள் கோயிலுக்கு போவார்கள், பட்டை பூசுவார்கள், தீபம் ஏற்றுவார்கள், வீட்டில் பூஜை நடத்துவார்கள். இதையெல்லாம் நாலு சுவற்றுக்குள் நடக்கும், மக்களுக்கு தெரியாது என நினைப்பார்கள். இந்த தேர்தலுக்கு எந்த கோவிலுக்கும் போக வேண்டாம், எந்த சர்ச், மசூதி பள்ளிவாசலிலும் திருமாவளவன் நிற்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். திரப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற சென்னது பாஜக அல்ல, நீதிமன்றம் 


ராகுல் காந்தி வாக்கு இயந்திரத்தில் குற்றச்சாட்டு உள்ளது என கூறினார். ஆனால் பா.சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரம் அப்படி எதுவும் இல்லை என கூறினார். காங்கிரசில் உள்ள பல நபர்கள் வாக்கு இயந்திரத்தில் எந்த குளறுபடிகள் இல்லை என கூறி வருகிறார்கள். சொல்வதற்கு வாய் உள்ளது என எதையும் கூற கூடாது, யோசித்து பேச வேண்டும், தேர்தலில் போட்டியிடும் ஆசையோடு நான் கட்சிக்கு வரவில்லை. தலைவரும் கட்சியும் என்ன சொல்கிறதோ அதுக்கு நான் கட்டுப்பட்டு செயல்படுகிறேன். தேர்தலில் வாய்ப்பு கொடுப்பார்கள், பொறுப்பு கொடுப்பார்கள் என எந்த எதிர்பார்ப்போடும் நான் பாஜகவுக்கு வரவில்லை. கட்சி வளர்ச்சிக்கு தான் நான் வந்துள்ளேன். விஜயும், சீமானும் பாஜகவின் பிள்ளைகள் என்றால் திருமாவளவன் யாரின் பிள்ளை? திமுகவின் பிள்ளையா? காங்கிரசின் பிள்ளையா? பாஜக கூட்டணி தொகுதி பங்கீடு தொடர்பாக வந்த கணக்குகள் வதந்தி மட்டுமே” என்றார்.