பாஜக ஐடி நிர்வாகிகள் கூண்டோடு விலகியதாக வெளியான செய்தி முற்றிலும் தவறு- கரு. நாகராஜன்

பாஜக சென்னை மேற்கு மாவட்ட ஐ.டி. அணி நிர்வாகிகள் 13 பேர் கூண்டோடு அக்கட்சியில் இருந்து விலகினர்.
இது தொடர்பாக அனைத்து நிர்வாகிகளும் கையெழுத்திட்ட அறிக்கை ஒன்று இணையத்தில் வெளியானது. சென்னை மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு மற்றும் சமூக ஊடக பிரிவின் மாவட்ட தலைவர் அன்பரசு பெயரில் வெளியான இந்த அறிக்கையில், “அனைவருக்கும் வணக்கம், கட்சியில் சில காலமாக அசாதாரன சூழ்நிலை நிலவி வந்த நிலையில் ஒரு சில தினங்களாக பலர் என்னை தொடர்பு கொண்டு சில விளக்கங்களை கேட்க ஒரே சமயத்தில் அழைக்க முற்படும்பொழுது சிலருக்கு விளக்கம் அளிக்க முடியாத நிலை உருவாகிறது. ஆகவே என்னுடைய நிலையை அனைவருக்கும் தெரிவிக்க வேண்டிய கடமை தற்பொழுது எனக்கு ஏற்பட்டுள்ளது.
பல ஆண்டுகளாக பாஜக-வில் பயணித்துள்ளேன். அதில் கட்சி பொறுப்பு என்பது ஒரு சில ஆண்டுகள்தான், பதவி என்பதை எதிர்பார்த்து பணிபுரிபவன் அல்ல என்பது என்னை சுற்றி இருப்பவர்களுக்கு அனைவருக்கும் தெரியும். என் பணிகளை அனைவரும் அறிவீர்கள் என்று நம்புகிறேன். இத்தனை காலம் எனக்கு எதிரான அச்சுறுத்தல்களையும் புகார்களையும் எவ்வாறு நான் எதிர்கொண்டேன் என்று எண்ணி பார்க்கையில் எனக்கே வியப்பாக இருக்கிறது.
தகுதியற்றவன் என்று கூறி தரம் பிரிக்கும் சுயநலக்காரர்களின் சூழ்ச்சிகளுக்கு பலியாக விரும்பவில்லை. துஷ்ட சக்திகளிடம் இருந்து காத்துக் கொள்ளும் பரிகாரம் ஆகவே இதை செய்கிறேன். நிச்சயமாக தி.மு.க-வில் இணையமாட்டேன். திமுக-வை விமர்சிக்கவே பாஜக-வில் இருந்து விலகுகிறேன். தொடர்ந்து என் மீது அன்பு காட்டி வரும் நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் என் உளப்பூர்வான நன்றிகள்.
சென்னை மேற்கு மாவட்டம் ஓரத்தி அன்பரசு தலைமையில் ஐடி மாவட்ட செயலாளர்கள் விலகி அதிமுகவில் இணைந்துள்ளதாக செய்திகள் வருகிறது அவர் குறிப்பிட்டுள்ள மாவட்டச் செயலாளர்களில் ஒருவர் பெயர் கூட அதிகாரப்பூர்வமான மாவட்ட நிர்வாகிகள் பட்டியலில் இல்லை என்பதை கீழ்க்கண்ட கடிதங்கள் மூலம் அறியலாம் pic.twitter.com/SxadeDeHxL
— Karu.Nagarajan (@KaruNagarajan) March 8, 2023
என்னுடன் கட்சியில் இணைந்து பணி செய்து வரும் அன்பு சகோதரர்களின் எண்ணங்களுக்கு மதிப்பளிக்கும் வகையிலும் அவர்களது வலியுறுத்தலின் பேரிலும் அன்புக்குரிய தலைவர் திரு C.T.R நிர்மல் குமார் அவர்களுடன் அரசியல் பாதையில் பயணிப்பது என்று முடிவு செய்யப்படுகிறது.” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் இது உண்மைக்கு புறமான செய்தி என பாஜக மாநில தலைவர் கரு. நாகராஜன் ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக இரு புகைப்படங்களை வெளியிட்டுள்ள அவர், அத்துடன், “சென்னை மேற்கு மாவட்டம் ஓரத்தி அன்பரசு தலைமையில் ஐடி மாவட்ட செயலாளர்கள் விலகி அதிமுகவில் இணைந்துள்ளதாக செய்திகள் வருகிறது அவர் குறிப்பிட்டுள்ள மாவட்டச் செயலாளர்களில் ஒருவர் பெயர் கூட அதிகாரப்பூர்வமான மாவட்ட நிர்வாகிகள் பட்டியலில் இல்லை என்பதை கீழ்க்கண்ட கடிதங்கள் மூலம் அறியலாம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.