"மக்களை பாஜக பிரித்தாளுகிறது" - கனிமொழி எம்.பி., பேச்சு!!

 
tn

மக்களை பாஜக பிரித்தாளுகிறது என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.  

 தூத்துக்குடியில் ‘இந்தியா’ கூட்டணி பொதுக்கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பேசும் போது, பாஜக தொடர்ந்து மக்களை பிரித்தாளுகிறது; இந்துகளை, இந்து மதத்தை பாதுகாத்துக் கொண்டிருப்பவர்கள் நாங்கள் தான் என்று கூறுகின்றனர்; ஆனால் அவர்களை அரசியல் கேடயமாகவும், அரசியலுக்கான ஆயுதமாகவும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்

Kanimozhi

பெரும்பான்மையாக இருக்கக்கூடிய இந்து மக்களுக்கு இந்த ஆட்சி என்ன செய்திருக்கிறது என்று சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.


அத்துடன் கனிமொழி எம்.பி., தனது சமூகவலைத்தள பக்கத்தில் நேற்று உடன்குடியில் நடைபெற்ற 'I.N.D.I.A. கூட்டணி வெல்வது நிச்சியம்' பொதுக்கூட்டத்தில் பங்கேற்று, ஜனநாயகம் காக்க அணி திரண்டிருக்கும் நம் I.N.D.I.A. கூட்டணியின் வெற்றியின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றினேன். அமைச்சர் திரு.@ARROffice, தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் திரு. @PeterAlphonse7, சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. @shunmugaiah_mla, திரு. @mlavilathikulam, திரு.@Oorvasi_Amirth, திரு. @aloor_ShaNavas, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் திரு.@Jeganperiyasami, மாவட்ட ஊராட்சி தலைவர் திருமிகு. பிரம்மசக்தி, உடன்குடி மேற்கு ஒன்றிய செயலாளர் திரு. டி.பி.பாலசிங் உள்ளிட்டோர் உடன் பங்கேற்றனர்.