கஞ்சாவுடன் முதல்வரை சந்திக்க முயன்ற பாஜக நிர்வாகி
Updated: Apr 29, 2024, 12:27 IST1714373834120
![tn](https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/5e9c9a1c7294c7b2868ae5bb23f0e6b7.png)
முதல்வர் ஸ்டாலினை பாஜக நிர்வாகி கஞ்சாவுடன் சந்திக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோடை காலத்தையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஏப்.29) கொடைக்கானலுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். சென்னையில் இருந்து விமான மூலமாக மதுரைக்கு சென்ற முதலமைச்சர் மதுரையிலிருந்து காரில் சாலை மார்க்கமாக கொடைக்கானலுக்கு செல்கிறார். இந்நிலையில் கஞ்சாவுடன் முதல்வர் ஸ்டாலினை பாஜக நிர்வாகி சந்தித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் முதலமைச்சர் ஸ்டாலினிடம் கஞ்சா பொட்டலத்துடன் மனு அளிக்க வந்த பாஜக நிர்வாகியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மனுவுடன் கஞ்சா பொட்டலத்தையும் எடுத்து சென்றதால், காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். பாஜக நிர்வாகி சங்கர் பாண்டியனை காவல்நிலையம் அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.