பெண் மருத்துவரிடம் ஹிஜாபை கழற்றுமாறு ரகளையில் ஈடுபட்ட பாஜக நிர்வாகி கைது!

 
பெண் மருத்துவரிடம் ஹிஜாபை கழற்றுமாறு ரகளையில் ஈடுபட்ட பாஜக நிர்வாகி கைது!

நாகை மாவட்டம் திருப்பூண்டி அரசு மருத்துவமனையில், இஸ்லாமிய பெண் மருத்துவரை ஹிஜாப்பை கழற்றச் சொல்லி பாஜக நிர்வாகி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

பெண்மருத்துவரிடம் ஹிஜாபை கழற்றச் சொன்ன பாஜக நிர்வாகியின் மீது 4 பிரிவுகளில் வழக்கு!

திருப்பூண்டியில் அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார் ஜன்னத். இவர் மருத்துவமனையில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது ஹிஜாப்  அணியக் கூடாது என்று பாஜக நிர்வாகி ஒருவர் அவரை மிரட்டியதாக தெரிகிறது. மேலும் அரசு பணியின்போது ஹிஜாப் ஏன் அணிய வேண்டும்? என கேள்வி எழுப்பினார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது.

இந்நிலையில் மத நல்லிணக்கத்திற்கு பெயர் போன நாகை மாவட்டத்தில் ஹிஜாபை கழட்ட சொல்லி பாஜக நிர்வாகி மிரட்டியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கம்யூனிஸ்ட் கட்சி , மனிதநேய மக்கள் கட்சி , மனிதநேய ஜனநாயக கட்சி,  விடுதலை சிறுத்தை கட்சி ஆகிய பிரமுகர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மத கலவரத்தை தூண்டும் வகையில் நடந்து கொண்ட பாஜக நிர்வாகியை கைது செய்ய வேண்டும் என்று கூறி சாலை மறியல் ஈடுபட்டுநிலையில், பாஜக நிர்வாகியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

இதனிடையே நாகை மாவட்டம் திருப்பூண்டி அரசு மருத்துவமனையில் பெண் மருத்துவரிடம் ஹிஜாபை கழற்றுமாறு ரகளையில் ஈடுபட்ட பாஜக விந்தோம்பல் பிரிவு மாவட்ட தலைவர் புவனெஷ்வர் ராம் என்பவரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டுவருகிறாது.