தமிழ்நாடு முழுவதும் பாலியல் வன்கொடுமை யதார்த்தமாகிவிட்டது- அண்ணாமலை

போதைப்பொருள் வியாபாரிகளை சுதந்திரமாக நடத்துவதில் தமிழக அரசு வேண்டுமென்றே மெத்தனமாகிவிட்டதா? என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில், “தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் சாதாரணமாகிவிட்டது. கிளாம்பாக்கத்தில் பேருந்திற்காக நின்றிருந்த இளம்பெண் ஆட்டோவில் கடத்தப்பட்டு வன்கொடுமை செய்யப்பட்டார். பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு ஒரு நல்ல மனிதரின் செயலால் பெண்ணை போலீசார் மீட்டுள்ளனர். தமிழக பெண்கள் சாலையில் பாதுகாப்பாக நடமாட இன்னும் எத்தனை பெண்கள் பாதிக்கப்படுவார்கள்? தமிழ்நாடு முழுவதும் பாலியல் வன்கொடுமை யதார்த்தமாக மாறிவிட்டது.
An 18-year-old girl was abducted in an auto rickshaw outside the Kalaignar Centenary Bus Terminus in Kilambakkam and was sexually assaulted. She was saved by a good samaritan who dialled the police control room after hearing the girl’s cry for help.
— K.Annamalai (@annamalai_k) February 5, 2025
Sexual assault across TN has… pic.twitter.com/Wa2AvsYybV
தமிழகம் முழுவதும் போதைப் பொருள் எளிதில் அணுகக்கூடிய பொருளாக மாறியுள்ளது. கஞ்சா, மெத்தபெட்டமைன் விற்பனை அதிகரித்து வருகிறது. ஆனால் கைதானவர்களின் எண்ணிக்கை குறைவது ஏன்? கடந்த மூன்று ஆண்டுகளில், 2022 மற்றும் 2024 க்கு இடையில், தமிழ்நாட்டில் NDPS வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1122 மட்டுமே. 2021 ஆம் ஆண்டில் (ஒரு வருடத்தில்), NDPS வழக்குகளில் மொத்த கைதுகளின் எண்ணிக்கை 9632 ஆகும். போதைப்பொருள் வியாபாரிகளை சுதந்திரமாக நடத்துவதில் தமிழக அரசு வேண்டுமென்றே மெத்தனமாகிவிட்டதா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.