"நீட் வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்காதது ஏன்?" - அண்ணாமலை

 
s

நீட் தேர்வுக்கு எதிரான போராட்ட விவகாரத்தில் மத்திய அரசுக்கு பாஜகவிலிருந்து விலகிய அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.


வீ த லீடர்ஸ் நிறுவனர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில், “நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு தற்போது வரை மத்திய பாஜக அரசு பொறுப்பேற்காதது ஏன்? மாணவர்கள் போராட்டம் வன்முறையாக மாறும் வரை பேச்சுவார்த்தைக்கு முன் வராமல் பாஜக அரசை தடுத்தது எது? போராட்டம் ஒரு தீவிரமான கட்டத்தை எட்டும் வரை பேட்சுவார்த்தை ஏன் தாமதப்படுத்தப்பட்டது? அரசு பொறுப்பேற்க தவறியதால் வீதியில் மாணவர்கள் போராட்டம் நடத்துகிறார்கள். போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தையை தொடங்க பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கு கால தாமதம் ஏன்? பேச்சுவார்த்தை தாமதத்துக்கு உங்களை எது காத்திருக்க வைத்தது? ஜனநாயகத்தில் போராட்டம் என்பது ஒரு அடிப்படை உரிமை. ஆனால் இங்கு எழும் முக்கிய கேள்வி இதுதான். சுயநலவாதிகள் போராட்டத்தின் ஆரம்பக் கோரிக்கைகளுக்கு முற்றிலும் தொடர்பில்லாத கருத்தை பரப்ப வாய்ப்புள்ளது. 


கடந்த 5 ஆண்டுகளில் நீட் வினாத்தாள் 3 முறை கசிந்துள்ளது. இதற்கு யாரும் பொறுப்பேற்கவில்லை. டெல்லியில் நடைபெறும் மாணவர்கள் போராட்ட விவகாரத்தில் பேச்சுவார்த்தையை தொடங்க மத்திய அரசு ஏன் இவ்வளவு காலம் எடுத்துக் கொண்டது? போராட்டம் உச்சகட்டத்தை எட்டும் வரை ஏன் தாமதம் ஆனது? பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசை தடுத்து நிறுத்தியது ஏன்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.