என் உழைப்பை இரட்டிப்பாக்குவேன்- அண்ணாமலை

 
அண்ணாமலை

வருங்காலங்களில் மக்களின் நலனுக்காக நமது உழைப்பை இரட்டிப்பாக்குவோம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

எனது நடைபயணம் மு.க.ஸ்டாலினை கலங்கடித்துள்ளது- அண்ணாமலை


கோவை தொகுதியில் பாஜக வேட்பாளராக களமிறங்கிய அண்ணாமலை தோல்வியடைந்த நிலையில் அறிக்கை வெளியிட்டுள்ள அவர், “கோவை பாராளுமன்றத் தொகுதி வேட்பாளராகப் போட்டியிட்ட எனக்கு, 4.50 லட்ச வாக்குகள் அளித்து, அன்பையும் ஆதரவையும் அள்ளித் தந்திருக்கும் கோவை பாராளுமன்றத் தொகுதி பொதுமக்கள் அனைவருக்கும் தலைவணங்கி நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கோவையின் புதிய பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சகோதரர் திரு. ராஜ்குமார் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். 


கோவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட மாற்று கட்சியினர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். கோவை தொகுதி வளர்ச்சிக்கு, அவர் மேற்கொள்ளும் அனைத்து நலத்திட்டங்களுக்கும் முழுமையான ஆதரவை அளிப்பதோடு, தொடர்ந்து கோவை தொகுதி பொதுமக்கள் முன்னேற்றத்துக்கான என் உழைப்பை இரட்டிப்பாக்குவேன் என்று உறுதி அளிக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.