இனி விமான நிலையங்களில் செய்தியாளர்களை சந்திக்க மாட்டேன்- அண்ணாமலை

 
a

இனிமேல் வாழ்க்கையில் விமான நிலையங்களில்  செய்தியாளர் சந்திப்பு கொடுக்க மாட்டேன் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

 அண்ணாமலை

கோவை விமான நிலையத்தில் செய்டியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “இனிமே கட்சிஅலுவலகத்தில் மட்டுமே, முன்கூட்டியே தகவல் தெரிவித்தபின் தான் பிரஸ்மீட் நடக்கும். பாத்ரூம் போகும்போது , திரும்பி வரும்போதெல்லாம் யாரும் பிரஸ்மீட் கொடுக்க மாட்டாங்க! குறிப்பாக இனிமேல் வாழ்க்கையில் விமான நிலையங்களில்  செய்தியாளர் சந்திப்பு கொடுக்க மாட்டேன். நான் மட்டுமல்ல பாஜகவில் யாரும் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்திக்க மாட்டார்கள். பா.ஜ.கட்சி அலுவலகத்தில் மட்டும் சந்திப்பு இருக்கும். இதை முறைபடுத்த போகின்றோம்.

விமானத்தில் வரும்போது 3 மணிநேரம் ஆகிறது. அந்த நேரத்தில் என்ன நடக்கிறது என தெரியவில்லை” என்றார்.