மோடியின் தமிழக பயணம் முழுக்க முழுக்க ஆன்மீக ரீதியானது; இதில் அரசியல் இல்லை- அண்ணாமலை

 
Annamalai

பாரதப் பிரதமர் மோடியின் தமிழக பயணம் என்பது முழுக்க முழுக்க ஆன்மீக  ரீதியானது, இதில் அரசியலுக்கு துளியும் இடமில்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

tn

சென்னை திருவான்மியூர் அருள்மிகு பாம்பன் குமரகுருதாசர் சுவாமி திருக்கோவிலில் பாஜக சார்பில் கோவில் சுத்தம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்று கோயிலை சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டார். கோயில் பிரகாரம் சுற்றி உள்ள இடங்களை தண்ணீரை ஊற்றி சுத்தம் செய்தார். கோயிலில் சாமி தரிசனம் செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, “அடுத்த 4 நாட்களுக்கு  கோவில்கள், மசூதிகள், சர்ச்சுகள் உள்ளிட்ட 5000 மத வழிபாட்டு தலங்களில் பாஜக சார்பில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு இருக்கிறோம். அந்த வகையில் இன்று திருவான்மியூரில் உள்ள ஸ்ரீ குமரகுரு தாசர் சுவாமி திருக்கோவில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டோம். பல்லாவரம் எம்எல்ஏ கருணாநிதியின் மகன் வீடு இந்த பகுதியில் தான் உள்ளது. ஒரு பெண்ணை கொடுமைப்படுத்தி இருக்கிறார்கள், அந்த பெண் மருத்துவம் படிக்க வேண்டும் என்ற ஆசையால் தான் வேலைக்கு வந்து இருக்கிறார். இதற்குப் பிறகும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் என்ன சமூக நீதி? நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் பாஜக களத்தில்  இறங்கி போராடும்.

மூன்று மாதத்திற்கு ஒரு முறை ஆளுநரை திட்ட வேண்டும் என்று திமுக படத்தில் வருவது போல் திட்டம் வைத்துள்ளது. எங்கள் பேச்சைக் கேட்கவில்லை என்றால் இதுதான் நடக்கும் என்பது போல சேலம் துணைவேந்தருக்கு திமுக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது போல் இருக்கிறது. ஆளுநரை பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கில் துணைவேந்தரை கைது செய்து காவல்துறையை ஏவி இருக்கிறார் முதல்வர்.மலிவு அரசியல் செய்வது முதல்வரா? ஆளுநரா? முதல்வர் அரசியல் காழ்ப்புணர்ச்சியினால் ஆளுநரை அடிக்கடி வம்புக்கு இழுக்கிறார் என்பது எங்கள் பார்வை. பிரதமருடனான பாஜகவினர் சந்திப்பு அரசியல் சந்திப்பு இல்லை. கூட்டணி குறித்து தலைமை முடிவெடுக்கும்.

அண்ணாமலை

2024 நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் மோடி பிரதமராக வேண்டும் என மக்கள் நினைப்பதே முதல் வெற்றி. காங்கிரஸில் தலைவர்கள் இருக்கிறார்கள் ஆனால் தொண்டர்கள் இல்லை. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் துணை முதல்வர் என ஆரம்பித்ததே திமுகவினர்கள் தான். படிப்பது ராமாயணம் இடிப்பது பெருமாள் கோவில் என்பது போல திமுக ஆட்சிக்கு வந்ததுடன் பல கோவில்களை இடித்தனர். இஸ்லாமியர் உட்பட அடங்கி ஐந்து நீதிமன்ற அமர்வில் அளிக்கப்பட்ட தீர்ப்பில் இரு சமூகத்தினருக்கும் நீதி வழங்கப்பட்டு மக்களின் பணத்தில் இந்த கோவில் கட்டப்பட்டது. நானும் எனக்கு முன்பிருந்த தலைவர்களும் பாஜக வளர்ச்சிக்காக நலனுக்காக தொடர்ந்து உழைத்து வருகிறோம்” எனக் கூறினார்