காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது ஏன்?- அண்ணாமலை விளக்கம்

 
Annamalai

மேகத்தாதுவில் அணை கட்ட 9000 கோடி ஒதுக்கீடு கர்நாடக காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி அறிவித்து இருக்கிறது. பாஜக அண்ணாமலை கூட அணையை எதிர்த்துப் போராடினார். ஆனால் திமுக இந்த விவகாரம்  தொடர்பாக வாய்திறக்கவில்லை.

Annamalai

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி மேகதாது அணை கட்டுவோம் என்று தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்ததோடு, ஆட்சி அமைத்தவுடன் முதல் சட்டமன்ற கூட்டத்தொடரில் அதற்கு நிதியும் ஒதுக்கவுள்ளனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காங்கிரஸ்க்கு கூறிய வாழ்த்து செய்தியில் மேகதாது தொடர்பாக குறிப்பிடவில்லை. மேகதாது வேண்டாம் என குறிப்பிடுவார் என எதிர்பார்த்தேன். ஆனால் இதற்கு எதிராக முதலமைச்சர் ஒருவார்த்தை கூட சொல்லவில்லை. காங்கிரஸ் மேகதாது மீது அணை கட்ட முயற்சித்தால் பாஜகவே முதலில் போராட்டத்தை நடத்தும்.

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலை நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக கருத முடியாது. மஜத கட்சியின் வாக்குகள் காங்கிரஸ் கட்சிக்கு சென்றதால் அக்கட்சி வெற்றி பெற்றுள்ளது. தமிழர்கள் அதிகம் வசிக்கும் பெங்களூருவில் அதிக இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. பாஜகவின் வாக்கு வங்கிகள் சரியவில்லை. எம்.பி. தேர்தலுக்கு முன்னோட்டமாக கர்நாடக தோல்வியை கருத இயலாது” என்றார்.