பிட்காயின் மோசடி- ஓசூரில் உள்ள டிகே டிரேடர்ஸ் நிறுவனத்துக்கு சீல்

 
பிட்காயின் மோசடி

ஓசூரில் செயல்படும் யுனிவர் காயின் என்கிற நிறுவனம்  ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்னாள் ராணுவ வீரர்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களிடம்  ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் குற்றப்பிரிவு போலீசார் காலை முதல் மாவட்டத்தின் 8 இடங்களில் உள்ள ஏஜென்ட் வீடுகளில்  சோதனை நடத்தி வருகின்றனர்.

பிட் காயின் திட்டத்தில் பல கோடி மோசடி புகார்: கிருஷ்ணகிரி, தருமபுரியில் 8 இடங்களில் போலீசார் சோதனை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் அருண்குமார் என்பவர் யுனிவர் காயின் என்கிற டிஜிட்டல் காயின் நிறுவனத்தை கடந்த 2021 ஆம் ஆண்டு துவங்கி நடத்தியுள்ளார்.இந்த நிறுவனத்தில் 7, 70,000 டெபாசிட் செய்தால் இணையதள முகவரி வழங்கப்படும்.அதில் உங்கள் டெபாசிட் தொகைக்கு பாயிண்ட் காயின் அதிகரிக்கும் .அதன்படி வாரம் வாரம் 93 ஆயிரம் ரூபாய் தங்களுக்கு திரும்ப செலுத்தப்படும் என தெரிவித்துள்ளது. இந்த நிறுவனத்தில் கிருஷ்ணகிரி பகுதியில் சேர்ந்த நந்தகுமார் ஷங்கர் ஞானசேகர் சீனிவாசன் பிரகாஷ் வேலன் ஆகியோர் முகவர்களாக சேர்ந்துள்ளனர். இவர்கள் மத்தூர் போச்சம்பள்ளி காவேரிப்பட்டினம் என மாவட்டம் முழுவதும் பொதுமக்களிடம் ஆசை வார்த்தைகள் கூறி மேற்கண்ட நிறுவனத்தில் டெபாசிட் செய்ய வைத்துள்ளனர்

அதன்படி ஏராளமான பொதுமக்கள் இந்த நிறுவனத்தில் 1 லட்சம் முதல் 30 லட்சம் வரையில் டெபாசிட் செய்தனர். இந்த நிலையில் நிறுவனத்தில் சார்பில் ஒரு சில வாரங்கள் மட்டும் வாடிக்கையாளர்களுக்கு பணம் திரும்ப வழங்கப்பட்டுள்ளது. பிறகு நிறுவனத்தின் சார்பில் பணம் வழங்கபடவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து டெபாசிட் செய்தவர்கள்  முகவர்களாக செயல்பட்ட நந்தகுமார் ஷங்கர் ஆகியோரை அணுகி போது முறையான பதில் இல்லாத காரணத்தால், முகவர்கள்  அருண்குமார் மீது கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கடந்த மாதம் புகார் மனு அளித்தனர்.

நிறுவனத்தின் உரிமையாளர் அருண்குமார் பொதுமக்களிடம் ஆசை வார்த்தைகள் கூறி டெபாசிட் பெற்றுக் கொண்டு சுமார் 500 கோடி ரூபாய் வரையில் மோசடி செய்திருப்பதாக புகார் தெரிவித்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும்  100 கோடி ரூபாய் அளவிற்கு  மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது

இவை தவிர தமிழகத்தில்  தர்மபுரி திருவண்ணாமலை வேலூர் மதுரை கன்னியாகுமரி போன்ற அனைத்து மாவட்டங்களிலும் மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதை அடுத்து இன்று காலை 5 மணி முதல் கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் மொத்தம் எட்டு இடங்களில் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள் . மாவட்டம் முழுவதும் மொத்தம் எட்டு இடங்களில் 50 போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள் . கிருஷ்ணகிரி, ஓசூர், பர்கூர், பெருகோபணபள்ளி, தண்டேகுப்பம், மாரண்டஅள்ளி உள்ளிட்ட 8 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

கிருஷ்ணகிரி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பி சிவக்குமார் , சேலம் பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பி சீனிவாசன் ,ஆகியோர் தலைமையில் கிருஷ்ணகிரி பொருளாதார குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் மற்றும் சேலம் நாமக்கல் ஈரோடு தர்மபுரி கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பொருளாதார குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர்கள் போலீசார் என மொத்தம் 50 பேர் இந்த சோதனையில் ஈடுபட்டனர்,சுமார் மூன்று மணி நேரம் நடைபெற்ற சோதனைக்கு பின் அந்த அலுவலகத்திற்கு போலீசார் சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர்