#BIG NEWS : போர் பதற்றம் அதிகரிப்பு..! அமெரிக்கக் குழுவின் பாகிஸ்தான் பயணம் திடீர் ரத்து..!

 
trump

பிப்ரவரி 28ம் தேதி முதல் அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர் துவங்கி நடந்து வருகிறது. இந்தத் தாக்குதல் காரணமாக ஹார்மூஸ் ஜலசந்தியை முடக்கி, சர்வதேச அளவில் எரிசக்தி பற்றாக்குறையை ஈரான் ஏற்படுத்தியது. இதனிடையே, பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, மே 1ம் தேதி வரை போர் நிறுத்தத்தை நீட்டிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார்.

முதற்கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், போர் நிறுத்தம் தொடர்பான 2ம் கட்ட பேச்சு நடத்துவதற்காக, ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி தலைமையிலான குழுவினர் பாகிஸ்தான் சென்றனர். அமெரிக்க குழுவினரும் பாகிஸ்தான் வருவதாக இருந்தது.

இந்த நிலையில், அமெரிக்க குழுவின் பாகிஸ்தான் பயணத்தை அதிபர் டிரம்ப் ரத்து செய்வதாக அறிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்; ஈரான் பிரதிநிதிகளை சந்தித்து பேச்சு நடத்துவதற்காக பாகிஸ்தான் செல்லவிருந்த அமெரிக்க பிரதிநிதிகளின் பயணத்தை ரத்து செய்துள்ளேன். பயணத்திலேயே அதிக நேரம் வீணாகிறது. வேலையும் அதிகம் உள்ளது. அங்குள்ளவர்களுக்கு யார் பொறுப்பில் இருக்கிறார்கள் என்று கூட தெரியவில்லை. மேலும், அனைத்து சாதகமான அம்சங்களும் எங்களிடமே உள்ளன. ஆனால், அவர்களிடம் எதுவுமில்லை. அவர்கள் பேச விரும்பினால், அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒரு அழைப்பு விடுப்பது மட்டும் தான்,

இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.