#BIG NEWS : தமிழ்நாட்டில் தடுப்பூசி கட்டாயம்.. மீறினால் உரிமம் ரத்து..!
தமிழகத்தின் சிறிய தேநீர் கடைகளிலிருந்து பெரிய ரெஸ்டாரண்ட்கள் வரை அனைத்து உணவகங்களும் உணவு பரிமாறும் பணிகளிலும் ஈடுபடும் ஊழியர்கள் கட்டாயமாக குடல் காய்ச்சல் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும் என்று உணவு பாதுகாப்புத்துறை வலியுறுத்தியுள்ளது. உணவகத்தில் உணவை தயாரிக்கும் நேரத்தில், பாதிக்கப்பட்டவர்கள் சமைப்பதோ பரிமாறுவதோ செய்தால் தொற்றுநோய் உணவு மூலம் பரவும் அபாயம் அதிகரிக்கும் என்பதால், முழு மாநிலத்தையும் உள்ளடக்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அண்மையில் உணவகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் மூலம் காய்ச்சல் மற்றும் தொற்று பரவியதாக மக்கள் மத்தியில் பல புகார்கள் எழுந்துள்ளன. உணவை நேரடியாக கையாளும் ஊழியர்கள் நோயால் பாதிக்கப்பட்டால் அது உணவைத் தொடங்கியவுடன் பலருக்கும் பரவக்கூடிய அபாயம் இருப்பதால், இந்த உத்தரவு பொதுச்சுகாதாரத்தைக் காக்கும் முக்கிய நடவடிக்கையாக கருதப்படுகிறது.
உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவிப்பதாவது, உணவக உரிமையாளர்கள் தங்களின் கடையை நடத்த உணவு பாதுகாப்பு லைசென்ஸ் கட்டாயமாகப் பெற்றிருக்க வேண்டும். இதை புதுப்பித்துக் கொள்ளாமை அல்லது விதிமுறைகளை மீறுவது சட்ட ரீதியான நடவடிக்கைக்கு தக்கதாகும்.
உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவிப்பதாவது, உணவக உரிமையாளர்கள் தங்களின் கடையை நடத்த உணவு பாதுகாப்பு லைசென்ஸ் கட்டாயமாகப் பெற்றிருக்க வேண்டும். இதை புதுப்பித்துக் கொள்ளாமை அல்லது விதிமுறைகளை மீறுவது சட்ட ரீதியான நடவடிக்கைக்கு தக்கதாகும்.
சமையலறையில் பணிபுரியும் ஊழியர்கள் எந்த வகையான காய்ச்சலாலும், உடல் தொற்றாலும் பாதிக்கப்படக் கூடாது என்று தெளிவாக அறிவிக்கப்பட்டுள்ளது. உணவக ஊழியர்கள் கைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். உணவு சமைக்கும் போதும், பரிமாறும் போதும் கையுறை மற்றும் தலைக்கவசம் அணிந்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
உணவகங்களில் சமையலறைகள், பொருட்களை சேமிக்கும் பகுதிகள், ஒவ்வொரு உணவகத்திலும் உள்ள கை கழுவும் இடங்கள் மற்றும் கழிவறைகள் அனைத்தும் பராமரிப்புடன் சுத்தமாக வைத்திருக்க வேண்டியது உணவு பாதுகாப்பின் பிரதான அடிப்படை நெறிகளில் ஒன்றாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஊழியருக்கும் தடுப்பூசி செலுத்துவதற்கான செலவான ரூ.500-ஐ உணவக உரிமையாளர்களே வழங்க வேண்டும் என்பது உத்தரவின் முக்கிய அம்சமாகும். தடுப்பூசி போடப்பட்ட பிறகு, ஒவ்வொரு ஊழியருக்கும் தனிப்பட்ட மருத்துவச் சான்றிதழ் வழங்கப்படும். இந்தச் சான்றிதழ் பின்னர் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மேற்கொள்ளும் ஆய்வுகளில் சரிபார்க்கப்படும்.
மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மாநிலம் முழுவதிலும் உள்ள பெரிய, நடுத்தர மற்றும் சிறிய ஹோட்டல்களை இணைந்து திடீர் ஆய்வுகள் செய்ய உள்ளனர். தொழிலாளர்கள் யாரேனும் தடுப்பூசி போடவில்லை என்பதை கண்டறிந்தால், அந்த உணவகத்துக்கு தண்டனை, அபராதம் அல்லது உரிமம் ரத்துச் செய்தல் போன்ற கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.


