#BIG NEWS : பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை விடுப்பு..!!

 
Q

தெற்கு பிலிப்பைன்ஸின் மின்டானோ பிராந்தியத்தில் 7.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் ஒருவர் உயிரிழந்ததோடு, 4 பேர் காயம் அடைந்தனர்.

 

இதைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

மின்டானோ பகுதியில் இருந்து 35 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, பலாவ், தைவான் மற்றும் பப்புவா நியூ கினியா ஆகிய நாடுகளின் கடற்கரைகளில் அடுத்த மூன்று மணி நேரத்திற்குள் சுனாமி ஏற்படக்கூடும் என பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் எச்சரிக்கையை விடுத்தது.

இதற்கிடையில் பிலிப்பைன்ஸ் அதிகாரிகள் நிலைமையைக் கண்காணித்து வருவதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளனர். நிலநடுக்கத்தால் பல கட்டடங்கள் இடிந்து தரைமட்டமானதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

தற்போது மீட்பு பணிகள் முழுவீச்சில் நடக்கிறது.