#BIG NEWS : 121 தொகுதிகளில் தவெக வெற்றி பெறும் - முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ரவி கணிப்பு..!
முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ரவியின் கருத்துக்கணிப்பு.
முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ரவி, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு நடத்தி உள்ளார். அதன் முடிவுகளை வெளியிட்டு அவர் கூறியுள்ளதாவது:
234 தொகுதிகளிலும் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டு உள்ளது. ஒவ்வொரு தொகுதியிலும் முன்னாள் போலீசார் 10 பேர் இந்த பணியில் ஈடுபட்டனர். ஒவ்வொருவரும் 100 பேரை சந்தித்தனர். மொத்தம் 2.34 லட்சம் பேரிடம் கருத்து கேட்கப்பட்டது. அதில் கிடைத்த தகவல்களை செயற்கை நுண்ணறிவு கருவிகள் மற்றும் வழக்கமான முறைப்படி ஆய்வு செய்யப்பட்டதில் 41 சதவீதம் பேர் தவெகவுக்கு ஓட்டுப்போட்டு உள்ளனர்.
திமுக, அதிமுகவுக்கு வழக்கமாக ஓட்டுப்போட்டவர்கள் பலர் விஜய் கட்சிக்கு ஓட்டுப்போட்டுள்ளனர். வீட்டில் உள்ள குழந்தைகள், மகன் , மகள் கூறியதால் அவர்கள் விஜய் கட்சிக்கு ஓட்டுப்போட்டு உள்ளனர்.கொங்கு மண்டலத்தில் திமுக, அதிமுக, தவெகவுக்கு சமபலத்தில் உள்ளன.
சென்னையில் தவெக செல்வாக்கு அதிகமாக உள்ளது. தெற்கு மண்டலத்தில் கலவையான முடிவுகள் கிடைத்துள்ளன. மொத்தமாக தவெகவுக்கு 121 தொகுதிகள் கிடைக்கவாய்ப்பு உள்ளது.
மற்ற தொகுதிகளில் மற்ற கட்சிகளுக்கு இடையே இழுபறி நிலவுகிறது. மாற்றம் வேண்டும் என்பதற்காக ஓட்டுப்போட்டதாக பலர் கூறியுள்ளனர். விஜய் மீதான ஈர்ப்பு காரணமாகவும் பெண்கள் விஜய்க்கு அதிகம் பேர் ஓட்டுப் போட்டுள்ளனர்.கொங்கு மண்டலத்தில் இளைஞர்கள் பலர் நாதகவுக்கு ஓட்டுப்போட்டுள்ளனர்.2.27 கோடி ரேசன் கார்டுகள் உள்ளன. 1.5 கோடி குடும்பங்களில் ஒருவர் தவெகவுக்கு ஓட்டுப்போட்டுள்ளனர்.முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 1 கோடி வரை இருக்கலாம். அவர்களில் நிறைய பேர் விஜய்க்கு ஓட்டுப் போட்டு உள்ளனர். கிறிஸ்தவ இளைஞர்கள், மீனவர்கள் தவெகவுக்கு ஓட்டுப் போட்டு உள்ளனர்.
இவ்வாறு அந்த வீடியோவில் ரவி தெரிவித்துள்ளார்.
Former Police officer Dr. Ravi IPS Says
— TD....❥ (@MiniiGirl__) May 1, 2026
TVK Gets - 41% - 121 Seats 🔥
Vetri Nichiyam @TVKVijayHQ 🦁
pic.twitter.com/CfEohxQsDB

