அதிர்ச்சி தகவல்! தமிழகத்தில் மிகப்பெரிய வருமான வரி மோசடி!

தமிழகத்தில் மிகப்பெரிய வருமான வரி மோசடி நடந்துள்ளதாக வருமான வரித்துறையின் புலனாய்வு பிரிவு அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மிகப்பெரிய வருமான வரி மோசடி நடந்துள்ளதாக வருமான வரித்துறையின் புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது. பொதுத்துறை, தனியார் நிறுவன ஊழியர்கள் போலி ஆவணங்கள் மூலம் ரூ.500 கோடிக்கு வருமான வரி மோசடி செய்துள்ளது அம்பலமாகியுள்ளது. தமிழகத்தில் 22,500 பேர் போலி ஐடி ரிட்டர்ன் தாக்கல் செய்துள்ளதாக வருமான வரித்துறையின் புலனாய்வு பிரிவு தகவல் தெரிவித்துள்ளது.
போலியான ஆவணங்களை சமர்ப்பித்து, வரி ஏய்ப்பு, வரி திரும்ப பெறும் மோசடி நடந்துள்ளதாக வருமான வரித்துறை தகவல் தெரிவித்துள்ளது. பொதுத்துறை, தனியார் ஊழியர்களின் வருமான வரி கணக்கு தாக்கல் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மிகப்பெரிய வருமான வரி மோசடி நடந்துள்ளதாக வருமான வரித்துறையின் புலனாய்வு பிரிவு கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.