குற்றாலம் அருவியில் அதிக தண்ணீர் வரத்தால் குளிக்க தடை விதிப்பு

குற்றாலம் அருவியில் திடீரென அதிக தண்ணீர் வரத்தால் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
குற்றாலத்தில் இந்த ஆண்டு சீதோஷ்ன நிலை சரியாக இல்லாத போதிலும் அவ்வப்போது ஓரிரு நாட்கள் மழை பெய்ததால் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு நாட்களாக மழை இல்லாதபோதும் அருவிகளில் தண்ணீர் சீராக விழுந்து கொண்டிருக்கிறது. இதனால் அருவியில் நீராட ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர். விடுமுறை நாளான இன்று காலை முதல் மெயின் அருவி,ஐந்தருவி பழைய குற்றால அருவிகளுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து ஆனந்தமாக நீராடினர். இதனால் அருவிக்கரைகள் களைகட்டின.
இந்நிலையில் குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றால அருவியில் அதிக தண்ணீர் வரத்தால் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. விடுமுறை தினமான இன்று அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் அங்கு குவிந்துள்ள நிலையில், தண்ணீர் குறைவதற்காக காத்திருக்கின்றனர்.