முழு ஊரடங்கு: வங்கிகள் இயங்குமா? இயங்காதா?
May 24, 2021, 05:03 IST1621812780000
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த இன்று முதல் தமிழகத்தில் தளர்வுகளற்ற ஊரடங்கு அமலுக்கு வருகிறது. இதனால் தமிழகத்தில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட வேண்டுமென தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் இன்று முதல் வங்கிகள் காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 வரை மூன்றில் ஒரு பங்கு ஊழியர்களுடன் செயல்படும் என மாநில அளவிலான வங்கியாளர்கள் குழுமம் அறிவித்துள்ளது. வங்கி ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் கொரோனா தடுப்பு வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.