காளிகாம்பாள் கோவில் பூசாரிக்கு ஜாமின் மறுப்பு

 
காளிகாம்பாள் கோவில் பூசாரிக்கு ஜாமின் மறுப்பு

பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்ட காளிகாம்பாள் கோவில் பூசாரி கார்த்திக் முனுசாமிக்கு ஜாமீன் வழங்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

Chennai Kalikampal temple priest files bail petition | சென்னை பாரிமுனை காளிகாம்பாள்  கோவில் பூசாரி ஜாமீன் மனு தாக்கல்

சென்னை காளிகாம்பாள் கோவில் பூசாரி கார்த்திக் முனுசாமி, தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக, சாலிகிராமத்தை சேர்ந்த பெண் ஒருவரின் புகார் அடிப்படையில், விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த கார்த்திக் முனுசாமி நேற்று கைது செய்யப்பட்டார். 

இந்நிலையில் ஜாமீன் கோரி கார்த்திக் முனுசாமி சார்பில் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  அதில், தனக்கும், புகாரளித்த பெண்ணுக்கும் இடையே சமரசம் ஏற்பட்டு விட்டதால், தனக்கு ஜாமீன் வழங்க ஆட்சேபம் தெரிவிக்கப் போவதில்லை என புகார் அளித்த பெண் சார்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக அந்த பெண் சார்பில் நீதிமன்றத்தில் மெமோ தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதி எஸ். அல்லி முன்பு விசாரணைக்கு வந்த போது புகாரளித்த பெண் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இருவருக்கும் இடையே சமாதானம் ஆகிவிட்டதாக கார்த்திக் முனுசாமி கூறியது தவறு என தெரிவிக்கப்பட்டது. மேலும், கார்த்திக் முனுசாமிக்கு ஜாமின் வழங்க கூடாது எனவும் புகாரளித்த பெண் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, கார்த்திக் முனுசாமிக்கு ஜாமீன் வழங்க மறுத்த நீதிபதி அல்லி, அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.