"சூர்யாவை விமர்சிப்பதை தவிர்க்கவும்" : அன்புமணிக்கு வலுக்கும் கோரிக்கை!!

 
jai-bhim-22

 கல்வி பணியில் பெரும் பங்கெடுத்து செயலாற்றி வரும் சூர்யாவை விமர்சிப்பதை தவிர்க்க வேண்டும் என்று அன்புமணிக்கு தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

jai-bhim-23

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் , நடிகர் சூர்யாவின் அவர்களின் நடிப்பில் வெளிவந்த ஜெய்பீம் திரைப்படத்தில் தொழில்நுட்ப கலைஞர்களால்  காண்பிக்கப்பட்ட தங்கள் கட்சியின் முத்திரையை நீங்கள் அடையாளப்படுத்தி அதை நீக்க வேண்டும் என வேண்டுகோள் வைத்தீர்கள் அந்த காட்சியை தொழில்நுட்ப கலைஞர்களின் தவறான புரிதலால் இடம்பெற்றுள்ளதை அறிந்து,  தங்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அந்த காட்சியை உடனடியாக திரைப்படத்திலிருந்து,  நடிகர் சூர்யா அவர்கள் நீக்கிவிட்டார்.   அந்த முத்திரை இடம் பெற்றதில் படத்தின் தயாரிப்பாளருக்கும்  கதாநாயகனாக நடிகர் சூர்யாவிற்கும்  எந்த வகையிலும் தொடர்பு இல்லை.  இருப்பினும் தங்கள் கட்சியை சார்ந்தவர்கள் நடிகர் சூர்யாவை தொடர்ந்து விமர்சித்து வருவது எந்த வகையிலும் நியாயமில்லை.  இந்த செயல் மிகவும் வருத்தமளிக்கிறது.  அரசியல் ,ஜாதி ,மத ,இன சார்பின்றி சமூக அக்கறையோடு ஈகை குணத்துடன், விளிம்புநிலை மாணவர்கள் மீது அக்கறை கொண்டு,  அவர்களின் கல்வி பணியில் பெரும் பங்கேற்று செயலாற்றி வரும், நடிகர் சூர்யா அவர்களை விமர்சிப்பது தவிர்க்குமாறு தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அன்புடன் கேட்டுக்கொள்கிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

jai-bhim-34

அதேபோல் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை வெளியிட்டுள்ள அறிக்கையில், நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி சமீபத்தில் ஓடிடி  தளத்தில் வெளியான ஜெய்பீம் திரைப்படத்தில் தொழில்நுட்ப கலைஞர்கள் தங்கள் கட்சியின் முத்திரையை நீங்கள் அடையாளப்படுத்தி அதை நீக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தீர்கள்.  எங்களுடைய தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் உறுப்பினர் சூர்யா அவர்கள் உங்கள் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அந்த காட்சியை உடனடியாக நீக்கி விட்டார். அந்த முத்திரையை பயன்படுத்தியதில் தயாரிப்பு நிறுவனத்திற்கும்,   படத்தின் கதாநாயகன் சூர்யாவிற்கும்  எள்ளளவும் தொடர்பு இல்லாத நிலையில்,  உங்கள் கட்சியினர் சூர்யாவை தொடர்ந்து விமர்சித்து வருவது எங்கள் திரைப்பட தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.  அரசியல், சாதி, மத, இன ஈர்ப்பு இன்றி சமூக அக்கறையோடு, ஈகை  குணத்துடன் விளிம்புநிலை மாணவர்கள் மீது விலாசமான  பார்வை கொண்டு,  கல்விப்பணியில் கலங்கரை விளக்காய் செயலாற்றி வரும் சூர்யா அவரை விமர்சிப்பதை தவிர்க்கும்படி வருத்ததுடன் வேண்டிக் கேட்டு கொள்கிறோம் என்று வலியுறுத்தியுள்ளது.