பெண் காவலரை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி! சென்னை ரயில் நிலையத்தில் அதிர்ச்சி

சென்னை பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் பெண் காவலரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற இளைஞர் கைது செய்யப்பட்டார்.
சென்னை பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் பெண் காவலரை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி நடைபெற்றுள்ளது. ரயிலில் இருந்து இறங்கி வெளியே நடந்து செல்லும்போது கீழே தள்ளி பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. முதலில் பெண் காவலரை தாக்கி நகை பறிக்க முயற்சி நடைபெற்றதாக தகவல் வெளியான நிலையில்,தற்போது வன்கொடுமை முயற்சி நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பெண் காவலரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற சத்தியபாலுவை கைது செய்த மாம்பலம் போலீசார், அவரை சிறையில் அடைத்தனர். அவர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
விசாரணையில் சத்தியபாலு போதையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பெண் காவலர் கூச்சலிடவே அக்கம்பக்கத்தினர் உதவியுடன் சத்தியபாலு பிடிக்கப்பட்டு போலீசில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.