“நேச பிரபு மருத்துவ செலவுகளை அரசு ஏற்க வேண்டும்” - பி.ஆர் பாண்டியன் வலியுறுத்தல்
Updated: Jan 25, 2024, 08:49 IST1706152797066
![tn](https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/af9a228c5f77f029d724dd35414de1b2.png)
நியூஸ்7 தமிழின் பல்லடம் செய்தியாளர் நேச பிரபு மீது நடத்தப்பட்ட தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன் என்று பி.ஆர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களில் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர் பாண்டியன் கூறியுள்ளதாவது:- மக்கள் பிரச்னைகளை, அதிகார வர்க்கத்தின் அத்துமீறல்களை துணிவுடன் களத்தில் நின்று எடுத்துரைக்கும் செய்தியாளர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்படுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது;
நியூஸ்7 தமிழின் பல்லடம் செய்தியாளர் நேச பிரபு மீது நடத்தப்பட்ட தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன். குற்றவாளிகளை அடையாளம் கண்டு தண்டிக்கப்பட வேண்டும்; முதலமைச்சர் தீவிர கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்நேச பிரபு மருத்துவ செலவுகள் முழுமையையும் அரசு ஏற்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.