தோட்டக்கலை அலுவலர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணை!!

 
ttn

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாக 391 உதவி வேளாண்மை அலுவலர் / உதவி தோட்டக்கலை அலுவலர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

உழவர்களின் நலன் காத்திட வேளாண்மை துறை , இணை வேளாண்மை உழவர் நலத்துறை என பெயர் மாற்றம் செய்து,  உழவர்களின் வருவாயைப் பெருக்க , வேளாண்மை உழவர் நலத்துறைக்கு என தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து,  தமிழகத்திலுள்ள வேளாண் பெருங்குடி மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த தமிழக முதல்வர் தலைமையிலான அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

govt

வேளாண் துறை சார்ந்த பணிகளை விரைந்து மேற்கொள்ளவும் வேளாண் திட்டங்கள் கடைக்கோடி விவசாயிக்கும் சென்றடையும் வகையிலும்,  வேளாண்மை தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

stalin

அந்த வகையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வாயிலாக துறைகளில் காலியாக உள்ள 161 உதவி வேளாண் அலுவலர் மற்றும் 230 உதவி தோட்டக்கலை அலுவலர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்குவதன் அடையாளமாக,  5 உதவி வேளாண் அலுவலர் பணியிடங்கள் பணியிடத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கும்,  ஐந்து உதவி தோட்டக்கலை அலுவலர் பணியிடத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கும், தமிழக முதல்வர் இன்று தலைமைச் செயலகத்தில் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.