SIR பணிகளை பொறுத்த வரை நாம் பாதி கிணற்றைதான் தாண்டி இருக்கிறோம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

 
1 1

தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று காலை 10 மணியளவில் தொடங்கியது. இந்த கூட்டத்தில் காணொலி காட்சி வாயிலாக மாவட்ட செயலாளர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.


இந்த கூட்டத்தில் திமுக மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், தொகுதி பார்வையாளர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

'என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி' என்ற பொருளில் நடைபெறும் இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் சட்டமன்ற தேர்தல் பணிகள், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் உள்ள வெற்றி வாய்ப்பு குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டன.

முதல்வர் ஸ்டாலின் மேலும் பேசுகையில்,வரைவு வாக்காளர் பட்டியல் வந்ததும் நாம் இன்னும் தீவிரமாக பணியாற்ற வேண்டும். SIR பணிகளை பொறுத்த வரை நாம் நிறைய கஷ்டங்கள் பட்டிருந்தாலும், பாதி கிணற்றைதான் தாண்டி இருக்கிறோம் என பேசினார். இனி வரும் நாட்களில் ஒவ்வொரு வாக்குச்சாவடியையும் வெற்றி வாக்குச்சாவடியாக மாற்றுவதற்கான பணிகளை முழு வீச்சில் மேற்கொள்ள வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

ஒவ்வொரு மாவட்டச் செயலாளரும் தங்கள் தொகுதிகளில் உறுப்பினர் சேர்க்கை, வாக்காளர் பட்டியல் சரிசெய்தல், போலி வாக்காளர்களை நீக்குதல் உள்ளிட்ட பணிகளை உடனடியாகத் தொடங்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.கூட்டத்தில் மாவட்ட வாரியாக உறுப்பினர் சேர்க்கை எண்ணிக்கை, இளைஞர் அணி, மகளிர் அணி செயல்பாடுகள், சிறுபான்மையினர் வாக்கு வங்கி பலப்படுத்தல் உள்ளிட்டவை விரிவாக விவாதிக்கப்பட்டன. “எதிரணியினர் தொடர்ந்து பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். நாமும் ஒரு நாள் கூட தாமதிக்காமல் களப்பணியில் இறங்க வேண்டும்” என்று முதல்வர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு உற்சாகம் அளித்தார்.

கடந்த முறை போலவே அனைத்து வாக்குச்சாவடிகளிலும் திமுக முகாம்கள் அமைத்து, தொண்டர்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.இந்தக் கூட்டம் திமுகவின் 2026 தேர்தல் உத்தியை முழுமையாகச் செயல்படுத்துவதற்கான முதல் பெரிய அடியாகக் கருதப்படுகிறது. பாஜக, அதிமுக, தவெக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து களத்தில் இறங்கி வரும் நிலையில், திமுகவும் தனது அடிமட்ட அமைப்பை முழுவதுமாகத் தயார்படுத்தி வருகிறது. “நாம் ஒன்றுபட்டு, ஒருமுகமாகச் செயல்பட்டால் 2026-லும் திமுக ஆட்சிதான்” என்ற நம்பிக்கையை முதல்வர் ஸ்டாலின் மாவட்ட நிர்வாகிகளிடம் ஊட்டினார்