ஆரணி: வீட்டில் கேஸ் அடுப்பில் கள்ளச்சாராயம் காய்ச்சிய பெண்

 
கள்ளசாராயம்

ஆரணி அருகே வீட்டிற்குள் கேஸ் அடுப்பு வைத்து சாராயம் காய்ச்சிய பெண் அதிரடி கைது செய்யப்பட்டுள்ளார்.

Image

கடந்த 3 தினங்களுக்கு முன்பு விழுப்புரம் மாவட்டம் மரக்கோணம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்திய 20க்கும் மேற்பட்டோர் இறந்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியுள்ளது. இதனையடுத்து தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு காவல்துறையினர் மாநிலம் முழுவதும் சாராயம் காய்ச்சுபவர்கள் மற்றும் விற்பவர்களை பிடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி உட்கோட்டத்தில் இதுவரை சாராயம் காய்ச்சிய மற்றும் சாராயம் விற்பனை செய்தோர் 40க்கும் மேற்பட்டோர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். இன்று ஆரணி கிராமிய காவல் நிலைய ஆய்வாளர் புகழ் தலைமையில் வடுகசாத்து பகுதியில் சாராய வேட்டையில் ஈடுபட்ட போது மீனா என்கின்ற பெண்மணி அவரது வீட்டில் கேஸ் சிலிண்டர் அடுப்பில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வந்துள்ளார். இதனை ஆய்வாளர் புகழ் தலைமையிலான காவலர்கள் அந்தப் பெண்மணியை கைது செய்து அவர்களிடம் இருந்த 100 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். 

தமிழகம் முழுவதும் கள்ளச்சாராய வேட்டை... சாராய வியாபாரிகள் அதிரடி கைது..!

அதேபோல் ஆரணி அருகே வேதாஜிபுரம் காட்டுப்பகுதியில் சாராய வேட்டையில் ஈடுபடும் போது சுரேஷ் மற்றும் ஆறுமுகம் இருவரும் சாராயம் விற்பனை செய்யும்பொழுது சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 500 லிட்டர் சாராயத்தை அழித்தனர். 

ஆரணி கிராமிய காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று ஒரு பெண் உட்பட மூன்று நபர்கள் கைது செய்து அவர்களிடம் இருந்து 600 லிட்டர் சாராயம் அழிக்கப்பட்டது. ஆரணி அருகே பெண்கள் வீட்டில் வைத்து சாராயம் காய்ச்சி விற்பனை செய்யும் சம்பவம் அனைவரிடமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது