உடனே விண்ணப்பீங்க..! செவிலியர்களுக்கு சூப்பர் சான்ஸ் - மொத்தம் 112 காலியிடங்கள்..!

 
1 1

செவிலியர் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கும், பொது செவிலியர் பயிற்சி முடித்தவர்களுக்கும் இது ஒரு பொன்னான வாய்ப்பு. மொத்தமாக 112 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

நிறுவனம்: மாவட்ட நலவாழ்வுச் சங்கம், காஞ்சிபுரம்

பணியிடம்: காஞ்சிபுரம்

பதவி: Staff Nurse

காலியிடங்கள்: 112

சம்பளம்: மாதம் ரூ. 18,000/-

இந்த அரசுப் பணியில் சேர்வதன் மூலம், நிலையான வருமானத்துடன் பாதுகாப்பான வாழ்க்கைக்கு நீங்கள் அடித்தளமிடலாம்.

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க, நீங்கள் B.Sc (Nursing) அல்லது GNM (General Nursing and Midwifery) முடித்திருக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் எதுவும் இல்லை என்பது ஒரு பெரிய சாதகமான அம்சம். தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். கல்வித் தகுதியும், நேர்காணலில் உங்கள் திறமையையும் வெளிப்படுத்தினால் போதும், அரசுப் பணியில் சேரலாம்.

விண்ணப்பங்கள் ஜூலை 11, 2025 அன்று தொடங்கி, ஜூலை 22, 2025 அன்று மாலை 05.45 மணியுடன் நிறைவடைகிறது. இந்த காலக்கெடுவுக்குள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பது அவசியம். விண்ணப்பப் படிவங்களை [https://kancheepuram.nic.in]என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், காஞ்சிபுரம் மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகத்திலும் நேரடியாகப் பெற்றுக்கொள்ளலாம்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், பணியிடங்களுக்குரிய அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் சுய சான்றொப்பமிட்டு (Self-attested) இணைக்க வேண்டும். விண்ணப்பங்களை நேரில் சென்று சமர்ப்பிக்கலாம் அல்லது விரைவு தபால் (Speed Post) மூலமாகவும் அனுப்பலாம்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

நிர்வாக செயலாளர்,

மாவட்ட நல வாழ்வுச் சங்கம் / மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகம்,

(District Health Society),

42A, இரயில்வே ரோடு,

அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் வளாகம்,

காஞ்சிபுரம் மாவட்டம்-631 501.

தொலைபேசி எண்: 044-27222019.