அண்ணா காட்டிய இலட்சியப் பாதையில் நம் பயணத்தைத் தொடருவோம் - கனிமொழி எம்.பி.,
![tn](https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/4a770e8389535a37a3b5864a14e934b4.jpg)
'தமிழ்நாடு' எனும் இனமானப் பெயரை, நம் நிலத்திற்கு மீட்டளித்தவரின் நினைவுநாள் என்று கனிமொழி எம்.பி., தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக திமுக எம்.பி., கனிமொழி தனது சமூகவலைத்தள பக்கத்தில், மாநிலங்களின் தன்னாட்சியின் வழியே இந்தியா என்னும் கூட்டாட்சிக் குடியரசை நனவாக்கிட உழைத்திட்டவர், பேரறிஞர் அண்ணா அவர்கள்.
'தமிழ்நாடு' எனும் இனமானப் பெயரை, நம் நிலத்திற்கு மீட்டளித்தவரின் நினைவுநாளான இன்று, அவரது நினைவிடம் நோக்கி நடைபெற்ற அமைதிப் பேரணியில் கழக நிர்வாகிகளுடன் பங்கேற்றோம்.
மாநிலங்களின் தன்னாட்சியின் வழியே இந்தியா என்னும் கூட்டாட்சிக் குடியரசை நனவாக்கிட உழைத்திட்டவர், பேரறிஞர் அண்ணா அவர்கள்.
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) February 3, 2024
'தமிழ்நாடு' எனும் இனமானப் பெயரை, நம் நிலத்திற்கு மீட்டளித்தவரின் நினைவுநாளான இன்று, அவரது நினைவிடம் நோக்கி நடைபெற்ற அமைதிப் பேரணியில் கழக நிர்வாகிகளுடன்… pic.twitter.com/m3xEHeEkrq
திராவிட இயக்கத்தின் ஒப்பில்லா ஆளுமையாக, அவர் காட்டிய இலட்சியப் பாதையில் நம் பயணத்தைத் தொடருவோம். ஜனநாயகத்தை வென்றெடுப்போம் என்று குறிப்பிட்டுள்ளார்.