நீட் தேர்வில் 720/720 பெற்ற திருவண்ணாமலை மாணவிக்கு அண்ணாமலை வாழ்த்து

 
ன்

நீட் தேர்வில் திருவண்ணாமலையை சேர்ந்த எம்.ஜெயதி பூர்வஜா என்ற மாணவி 720/720 பெற்று இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளார். அவரது வீட்டுக்கு சென்ற பாஜக நிர்வாகிகள் எம்.ஜெயதி பூர்வஜாவுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

இதுகுறித்து அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்த ஆண்டு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவச் செல்வங்களுக்கும், எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அகில இந்திய அளவில்,  தமிழகத்தைச் சேர்ந்த எட்டு மாணவச் செல்வங்கள் முதல் மதிப்பெண்ணை பெற்று, நமது மாநிலத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர் என்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. 

நீட் தேர்வில் முதல் மதிப்பெண்ணான 720/720 பெற்றவர்களில் ஒருவரான, திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த மாணவி, செல்வி ஜெயந்தி பூர்வஜா அவர்களை, இன்று தமிழக பாஜக திருவண்ணாமலை தெற்கு மாவட்டத் தலைவர் திரு பாலசுப்பிரமணியம் அவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்து, அவரது கடின உழைப்பிற்குப் பாராட்டு தெரிவிக்கும் விதமாக, ஸ்டெதஸ்கோப் ஒன்றைப் பரிசாக வழங்கி கௌரவித்தார். 

மனதில் உறுதியுடன் கடினமாக உழைத்தால்,  எண்ணிய இலக்கை நிச்சயம் எட்டலாம் என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கும் அனைத்து மாணவ செல்வங்களுக்கும்,  மீண்டும் ஒருமுறை நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.