ஒரே ஒரு ஓட்டு வாங்கிய அண்ணாமலை - அதிர்ச்சியில் பாஜக தொண்டர்கள்!!

 
tn

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடந்து முடிந்தது.  தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன.  இந்தியா அளவில்  பொருத்தவரை பாஜக கூட்டணி முன்னிலை வகுத்து வருகிறது.  இருப்பினும் கருத்துக்கணிப்பு முடிவுகளை விட இந்தியா கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது.  தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது.  குறிப்பாக தமிழகத்தில் பாஜகவுக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது.  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட நிலையில் பின்னடைவை சந்தித்துள்ளார்.

Annamalai

இந்நிலையில் கோயம்புத்தூர் மக்களவைத் தேர்தலில் 1வது சுற்று வாக்கு எண்ணிக்கையின் நிலவரப்படி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் 5027 வாக்குகள் பெற்றார்.  அதேபோல அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் 1541 வாக்குகளை பெற்றுள்ளார் .பாஜக வேட்பாளர் அண்ணாமலை 1852 வாக்குகளை பெற்றுள்ளார் .இருப்பினும் அண்ணாமலை ஒரு வார்டில் ஒரே ஒரு வாக்கை மற்றும் பெற்றுள்ளார். இது பாஜக தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

tt