குற்றவாளி ஞானசேகரனுக்கான தண்டனை ஜூன் 2ம் தேதி அறிவிப்பு!

 
anna univ anna univ

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளி ஞானசேகரனுக்கான தண்டனை ஜூன் 2 ஆம் தேதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஞானசேகரனை குற்றவாளி என அறிவித்து சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. குற்றம்சாட்டப்பட்ட 11 பிரிவுகளிலும் ஞானசேகரன் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த நிலையில், குற்றவாளி ஞானசேகரனுக்கான தண்டனை ஜூன் 2 ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளது. 


 
அண்ணா பல்கலை மாணவி வன்கொடுமை வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஞானசேகரன், தீர்ப்பு அறிவிக்கப்பட்டவுடன் கதறி அழுதுள்ளார். பின் தனக்கு குறைந்தபட்ச தண்டனை வேண்டுமென அவர் கோரிக்கை வைத்தார். இதனிடையே ஞானசேகரனுக்கு அதிகபட்ச தண்டனை தரப்பட வேண்டும். கருணை காட்டக் கூடாது என அரசு வழக்கறிஞர் மேரி ஜெயந்தி வாதத்தை முன்வைத்தார். இதேபோல் காவல்துறை தரப்பில், பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்து காட்டு மிராண்டி தனமான குற்றம் புரிந்துள்ளார் ஞானசேகரன். அரிதிலும் அரிதான வழக்கு என்பதால் அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்  என கோரிக்கை வைக்கப்பட்டது.