கோலியின் சாதனையை நினைத்துப் பார்க்க முடியாதது; எவராலும் முறியடிக்க முடியாதது- அன்புமணி ராமதாஸ்

 
virat

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 50 சதங்கள் அடித்த இந்திய வீரர் விராட் கோலிக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Image

நடப்பு உலகக் கோப்பை தொடரில் சச்சின் டெண்டுல்கர் சாதனையை விராட் கோலி முறியடித்தார். ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 50-வது சதம் அடித்து சச்சின் டெண்டுல்கரின் சாதனையை விராட் கோலி முறியடித்தார். இன்றைய போட்டியில் சதம் அடித்ததன் மூலம் ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் அடித்த வீரர் என்ற சச்சினின் சாதனையை முறியடித்தார்.  ஒருநாள் போட்டிகளில் 50-வது சதம், உலகக்கோப்பை தொடர்பில் அதிக ரன்களை குவித்தது என்ற சச்சினின் 2 சாதனைகளை கோலி முறியடித்தார்.

ஒரு நாள் போட்டிகளில் 49 சதம் அடித்த சச்சினின் சாதனையை சமன் செய்திருந்தார் விராட் கோலி. 106 பந்துகளில் 8 பவுண்டரிகள், ஒரு சிக்சர் விளாசி 50-வது சதத்தை விராட் கோலி பூர்த்தி செய்தார். 2003 உலகக் கோப்பையில் அதிகபட்சமாக 673 ரன்கள் சச்சின் டெண்டுல்கர் எடுத்திருந்தார். அதுவே தனிநபர் எடுத்த அதிகபட்ச ரன்களாக இருந்தது.இந்நிலையில் இன்றைய போட்டியில் 692 ரன்களை எடுத்ததன் மூலம் சச்சினின் சாதனையை விராட்கோலி முறியடித்திருக்கிறார். 



இந்நிலையில் சச்சினின் சாதனையை முறியடித்த இந்திய வீரர் விராட் கோலிக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஒருநாள் மட்டைப் பந்து போட்டிகளில் 50-ஆம் முறையாக சதமடித்து, எவராலும் முறியடிக்க முடியாது என்று கூறப்பட்ட சச்சின் தெண்டுல்கரின் சாதனையை முறியடித்து, புதிய சாதனையை படைத்துள்ள இந்திய  மட்டைப்பந்து வீரர் விராட் கோலிக்கு வாழ்த்துகள். உங்கள் சாதனை நினைத்துப் பார்க்க முடியாதது. எவராலும் முறியடிக்க முடியாதது. மேலும் பல புதிய சாதனைகளை படைக்க வாழ்த்துகள்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.