திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு மதுக்கடை கூட மூடவில்லை - அன்புமணி ராமதாஸ்

 
anbumani

போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடுவோர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

Centre, States should mull ban on liquor, tobacco products: Anbumani  Ramadoss - The Hindu


தமிழ்நாட்டில் மது உள்ளிட்ட  போதைப் பொருட்களை முழுவதுமாக தடை செய்ய வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் சென்னை ராஜாஜி சாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  300 க்கும் மேற்பட்டோர் பங்குபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மது , கஞ்சா , குட்கா ,  போதை மருந்து , போதை மாத்திரை உள்ளிட்ட அனைத்து வகை போதைப் பொருட்களுக்கும் தமிழக அரசு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கம் எழுப்பப்பட்டது. 

அதன்பின் பேசிய அன்புமணி ராமதாஸ், “போதைப் பொருள் பிரச்சனை என்பது இளைஞர்கள், அடுத்த தலைமுறை சார்ந்த பிரச்சனை. 43 ஆண்டுகால பொதுவாழ்வில் ஈடுபட்டுள்ள ராம்தாஸ்  மது, புகையிலை, குட்கா, ஆன்லைன் ரம்மி உட்பட மக்கள் பாதிக்கும் பிரச்சனைக்கு எதிராக போராட எங்களுக்கு உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் ஏழே முக்கால் கோடி பேரில் 50 லட்சம் இளைஞர்கள் போதைக்கு அடிமை. பிற மாநிலங்களில் இல்லாத போதைப் பொருட்கள் இங்கு விற்பனையாகிறது. போதைப் பழக்கத்தால் தமிழகத்தில் குடும்பத்தில் ஒருவராவது பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவையே சுமக்க வேண்டிய தூண் போன்ற இளைஞர்கள் , இந்தியாவிற்கு சுமையாகி விடுவார்களோ என அச்சமாக இருக்கிறது , இது முதல்கட்ட போராட்டம் , அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் எங்கள் போராட்டம் தீவிரமடையும். கஞ்சா , அபின் , காக்கேன் ஹெராயின் ,   எல்எஸ்டி போன்றவை பள்ளி , கல்லூரி வாசலிலே விற்பனை நடைபெறுகிறது. 

பேப்பர் வடிவில் போதைப் பொருள் விற்பனை நடக்கிறது , மாணவர்கள் நாவில் அதை வைத்துக் கொள்கின்றனர். பாட்டளி மக்கள் கட்சி தலைவராகி ஸ்டாலினை சந்தித்தபோது எனது முதல் கோரிக்கை போதைப் பொருட்களுக்கு எதிராக காவல்துறை நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என்பதுதான். தமிழகத்தில் 10 விழுக்காடு மாணவர்கள் போதைக்கு அடிமையாகியுள்ளதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது. கடந்த ஆண்டு 9 விழுக்காடு இந்த ஆண்டு 1 விழுக்காடு அதிகரிப்பு. போதை பழக்கமுள்ள 27 விழுக்காடு மாணவர்கள் எளிதில் கிடைப்பதால் அடிமையானதாக கூறியுள்ளனர். போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடுவோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். என்னிடம் அதிகாரமிருந்தால் 2 நாளில் போதைப் பொருளுக்கு முடிவு கட்டி விடுவேன். போதை விற்பனை நடைபெறும் பகுதியில் காவல் உதவி ஆய்வாளரை உடனடியாக பதவி நீக்கம்  செய்வேன்.

தமிழக அரசு போதைப் பொருட்களை முற்றிலுமாக ஒழிக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் பெண்களை கொண்டு எங்களது அடுத்த கட்ட போராட்டம் வெடிக்கும் .  இந்தியாவில் அதிக போதைப் பொருள் விற்கும் மாநிலமாக தமிழகம் மாறி விட்டது, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைக்கும் போதைப் பழக்கம் காரணமாக இருக்கிறது.கலால் துறையின் பணி மது விற்பனையை அதிகரிப்பது தான் என செந்தில் பாலாஜி தவறாக நினைத்துக் கொண்டிருக்கின்றார். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு மதுக்கடையை கூட மூடவில்லை. மது ஒழிப்பு தொடர்பாக  திமுக தேர்தல் அறிக்கையில் கூறியதை நிறைவேற்றவில்லை” எனக் கூறினார்.