அமோனியா வாயு கசிவு- தொழிற்சாலையின் உரிமையாளர் கைது
பெரியபாளையம் அருகே அமோனியா வாயு விபத்து சம்பவத்தில் தொழிற்சாலையின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே உள்ள கண்ணிகைப்பேரில் அமைந்துள்ள செயின்ட் பீட்டர்ஸ் பால் சீஃபுட்ஸ் எக்ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட அம்மோனியா வாயு கசிவில், ஒரு பெண் தொழிலாளி உயிரிழந்தார் மற்றும் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தொழிற்சாலை வளாகத்தில் தங்கியிருந்த புலம்பெயர் தொழிலாளர்களை இந்தக் கசிவு பாதித்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. பலருக்கு மூச்சுத்திணறல் மற்றும் வாய், மூக்கில் இருந்து இரத்தக் கசிவு ஏற்பட்டது. சிகிச்சையின் போது ஒரு தொழிலாளி உயிரிழந்தார், அதே நேரத்தில் கவலைக்கிடமான நிலையில் இருந்த மற்ற 7 பேர் சென்னையில் உள்ள அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அமோனியா வாயு கசிந்து விபத்து ஏற்பட்ட தொழிற்சாலையின் உரிமையாளர் மோகன் (59) மற்றும் மேலாளர் டேனியல் (68) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மீட்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம் கேட்டறிந்த முதலமைச்சர் விஜய்ல் சுகாடார இயக்குநர்கள் தலைமையில் விசாரணை குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளார். 24 மணிநேரத்திற்குள் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் வாயு கசிவால் பாதிக்கப்பட்டவர்களை மீட்க CBRN சிறப்புக் குழு விரைந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றுதல், அபாய பகுதியை தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை 30 பேர் கொண்ட CBRN சிறப்புக் குழு செய்து வருகிறது.

