ஈபிஎஸ் தலைமையில் கூட்டணி- அமித்ஷா அறிவிப்பு

தமிழகத்தில் அதிமுக தலைமையில், அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தலைமையில் தான் கூட்டணி அமைகிறது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “தமிழகத்தில் அதிமுக தலைமையில், அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தலைமையில் தான் கூட்டணி அமைகிறது. யாருக்கு எத்தனை தொகுதி என்பதை தேர்தல் நேரத்தில் முடிவு செய்வோம். தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் தான், ஆட்சியில் எங்களுடைய பங்கு என்னவாக இருக்கும் என்பதை பேசுவோம். தமிழகத்தில் இருந்து திமுகவை விரட்டியப்போம். 2026 சட்டமன்றத் தேர்தலை பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க. இணைந்து சந்திக்கும். தேசிய அளவில் மோடி தலைமையிலும், மாநிலத்தில் இபிஎஸ் தலைமையிலும் கூட்டணி.
அதிமுக எந்த கோரிக்கையும் வைக்கவில்லை. இது இயல்பாக அமைந்த கூட்டணி. அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் நாங்கள் தலையிடப்போவதில்லை. இந்த கூட்டணி இருவருக்குமே பயனளிக்கக்கூடியது. எந்த நிபந்தனையும் இன்றி அதிமுக உடன் கூட்டணி உறுதி செய்யப்படுகிறது, சட்டமன்ற தேர்தலில் பாஜக - அதிமுக கூட்டணி பெரும்பான்மையான வாக்குகளை பெற்று ஆட்சியமைக்கும். கூட்டணி குறித்து அதிமுக எந்தவித நிபந்தனையும்
வைக்கவில்லை” என்றார்.