வளைந்து, குனிந்து டேபிள் சேருக்குள் புகுந்துச் சென்று முதல்வர் பதவிக்கு வந்தது தான் தகுதியா? பாஜக கேள்வி

யாரிடமும் குனிந்து, வளைந்து கும்பிடு போட்டு பதவிக்கு வராதவர் எங்கள் தலைவர் அண்ணாமலை என பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இந்தியாவின் கூட்டணி கட்சிகளாக இருக்கும் அதிமுகவும், பாஜகவும் சமீபகாலமாக மோதலில் ஈடுபட்டுவருகிறது. இரு கட்சிகளுக்குமிடையே வார்த்தை போர் நிலவிவந்தநிலையில், சமீபத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ஜெயலலிதா குறித்து, அண்ணா குறித்தும் பேசியது அக்கட்சியினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனால் அதிமுக தலைவர்கள் அண்ணாமலை மீது பகிரங்க விமர்சனங்களை முன்வைத்தனர். பதிலுக்கு அண்ணாமலையும், தான் யாருக்கும் அடிமையில்லை என பகிரங்கமாக தெரிவித்தார். இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக கூட்டணியில் பாஜக தற்போது இல்லை. தனித்து போட்டியிட்டால் பாஜகவுக்குதான் பாதிப்பு, அண்ணாமலையால் நோட்டாவைகூட தாண்ட முடியாது எனக் கூறினார். இதனிடையே அதிமுக உடனான நிலைப்பாட்டில் இருந்து பாஜக மாநில தலைமை பின்வாங்க போவதில்லை என தகவல் வெளியாகியுள்ளது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு எதிராக அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட கண்டன தீர்மான நகலும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மாநில தலைவர் அமர்பிரசாத் ரெட்டி, “அ.தி.மு.கவை சார்ந்த திரு.ஜெயக்குமார்,திரு.C.V. சண்முகம் மற்றும் திரு.செல்லூர் கே.ராஜூ போன்றவர்கள் தொடர்ந்து நமது தமிழக பாஜக தலைவர் திரு. அண்ணாமலை அவர்களை பொதுவழியில் அவமரியாதையாக பேசிவருவது வன்மையாக கண்டிக்கதக்கது. மக்காளல் தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்கள் அரசியல் முதிர்ச்சி இன்றி,மூன்றாம் தர மோடை போச்சாளர்கள் போல அநாகரீகமாக பேசுவது மிகவும் வருத்தம் அளிக்கிறது.
தேர்தல் வெற்றிக்காக பா.ஜ.க வினர் கொண்ட கொள்கையில் ஒரு போதும் சமரசம் செய்திட மாட்டோம். மக்களின் நலனுக்காகவே பா.ஜ.க-அ.தி.மு.க கூட்டணியே தவிர 2024 பாராளுமன்ற மற்றும் 2026 சட்டமன்ற தேர்தலுக்காக அல்ல.வரும் காலங்களிலும் மத்தியில் அ.தி.மு.க கூட்டணி இன்றி பா.ஜ.க தனிபெருபான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்கிற அறியாமையின்றி பேசுகிறார்கள். மாநில தலைவர் திரு.அண்ணாமலை அவர்களை அ.தி.மு.கவினர் தொடர்ந்து இழிவாக பேசினால் பொறுத்துக்கொள்ள மாட்டோம் அவர்களது பாணியில் தக்க பதிலடி கொடுப்போம்.
வளைந்து, குனிந்து டேபிள் சேருக்குள் புகுந்துச் சென்று, முதல்வர் பதவிக்கு வந்தது தான் தகுதியா? ஜெயக்குமார். அப்படி யாரிடமும் குனிந்து, வளைந்து கும்பிடு போட்டு பதவிக்கு வராதவர் எங்கள் தலைவர் அண்ணாமலை. அது தான் எங்கள் தலைவருக்கான பெருமைமிகு தகுதி. கோடநாடு கொலை, -கொள்ளை போன்ற சர்ச்சையில் சிக்கியிருப்பதுதான், ஒரு கட்சித் தலைவருக்கான தகுதி என அதிமுக ஜெயக்குமார் நினைத்தால், அப்படிப்பட்டத் தகுதி எங்கள் தலைவருக்கு இல்லை தான்” எனக் குறிப்பிட்டுள்ளார்.