முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியது.
சென்னை தலைமைச் செயலகத்தில், தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், இன்று (05.02.2025) அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என முன்னதாக அறிவிக்கப்பட்டது. அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க வருமாறு 45 அரசியல் கட்சிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், விசிக, தமிழக வெற்றி கழகம், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட 45 கட்சிகளுக்கு அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி உள்ளிட்டவை அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்க போவதில்லை என அறிவித்துள்ளன. அதிமுக, தேமுதிக, மற்ற கட்சிகள் அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்பதாக அறிவித்தன.
இந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியது. சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்று வரும் இந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் பாஜக, நாம் தமிழர் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி உள்ளிட்டவை பங்கேற்கவில்லை. மற்ற கட்சிகள் பங்கேற்றுள்ள நிலையில், அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்று வருகிறது.