“தமிழகத்தில் விதவைகள் அதிகரிக்க மதுபானமே காரணம்”- ஆய்வில் தகவல்

 
tasmac

கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்கள் நலச் சங்கம் சார்பில் மதுரையில் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையில் தமிழகத்தில் கைம்பெண்கள் அதிகரிக்க மதுபானமே காரணம் என்பது தெரியவந்தது.

கைம்பெண்கள் அதிகரிக்க காரனம் மதுபானமே - ஆய்வறிக்கை

தமிழகத்தில் கைம்பெண்களின் எண்ணிக்கை அதிகரிக்க என்ன காரணம்? அவர்களின் பாதுகாப்பு, பொருளாதாரம் உள்ளிட்ட நிலை என்ன என்பது குறித்து சென்னை, அரியலூர், திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், ராமநாதபுரம், கரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், நீலகிரி, பெரம்பலூர், சிவகங்கை, தேனி, திருச்சி, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஆதரவற்ற பெண்கள் நலச் சங்கத்தினர் ஆய்வு மேற்கொண்டனர். அதில், தமிழகத்தில் 38.5 லட்சம் பேர் கைம்பெண்கள் உள்ளது தெரியவந்தது. அவர்களில் 38 சதவிகிதம் பேரின் கணவர்கள் போதையில் உயிரிழந்ததாகவும் அந்த அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

34.5 சதவீதம் பெண்களின் கணவன்கள் வியாதியின் காரணமாக இறந்ததும், 13.5 சதவீதம் சாலை விபத்துக்களால் கணவனை இழந்து கைம்பெண்களாக இருப்பதாகவும், 6.1 சதவீதம் தற்கொலை காரணங்களால் கணவனை இழந்து இருப்பதும், 3 சதவீதம் பிற காரணங்களால் கணவனை இழந்து இருப்பதும், 2.4 சதவீதம் கஞ்சா போன்ற போதை மருந்துகள் காரணமாக கணவனை இழந்து இருப்பதும், 1.8 சதவீதம் கொலை காரணமாக கணவனை இழந்து இருப்பதும், 0.6 சதவீதம் கொரோனா காரணமாக கணவனை இழந்து இருப்பதும் தெரியவந்துள்ளது.