திருச்சி துப்பாக்கிச் சுடும் போட்டியில் நடிகர் அஜித் பங்கேற்பு..

 
திருச்சி துப்பாக்கிச் சுடும் போட்டியில் நடிகர் அஜித் பங்கேற்பு..


திருச்சியில் நடக்கும் 47-வது மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் நடிகர் அஜித் பங்கேற்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திருச்சி துப்பாக்கிச் சுடும் போட்டியில் நடிகர் அஜித் பங்கேற்பு..

திருச்சி மாநகர கே.கே.நகர் ஆயுதப்படை வளாகத்தில் செயல்பட்டு வரும் ரைபிள் கிளப்பில் 47-வது மாநில துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி, பிஸ்டல் மற்றும் ரைபிள் துப்பாக்கி சுடும் போட்டி  2 நாட்களுக்கு முன்பு  தொடங்கியது.  இதில் தமிழகம் முழுவதும் இருந்து துப்பாக்கி சுடுதலில் பயிற்சி பெற்ற சுமார் 1,300 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.  இதில்10 மீட்டர், 25 மீட்டர் மற்றும் 50 மீட்டர் சுடு தளத்தில் பிஸ்டல் மற்றும் ரைபிள் துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் சிறியவர்கள், இளைஞர்கள், முதியவர்கள் என வகைபடுத்தப்பட்டு ,  சப் யூத் (16 வயது வரை), யூத் (19 வரை), ஜீனியர் (21 வரை), சீனியர்(21 முதல் 45 வயது வரை), மாஸ்டர் (45 வயது முதல் 60 வயது வரை) மற்றும் சீனியர் மாஸ்டர் (60 வயதிற்கு மேல்) என தனித்தனியாக போட்டிகள் நடத்தப்படுகிறது.

திருச்சி துப்பாக்கிச் சுடும் போட்டியில் நடிகர் அஜித் பங்கேற்பு..
பிஸ்டல் துப்பாக்கி சுடுவதற்கான போட்டியாளர்களுக்கு வருகிற 28-ந் தேதி வரை போட்டிகள் நடத்தப்பட்டு, இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்படுகிறது. 29-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை ரைபிள் துப்பாக்கி சுடுபவர்களுக்கான போட்டிகள் நடக்கின்றன. இதில் வெற்றி பெறுபவர்கள் தென்னிந்திய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்க முடியும். இந்நிலையில் இன்று நடைபெற்ற பிஸ்டல்  துப்பாகிச் சுடுதல் போட்டியில் நடிகர் அஜித் பங்கேற்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 10 மீட்டர் பிஸ்டல் மற்றும் ரைபிள் துப்பாக்கி சுடுதல் பிரிவுகளில் நடிகர் அஜித் பங்கேற்பதாக தெரிகிறது.