இளைஞர் அஜித் கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்..!!

 
இளைஞர் அஜித் கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்..!! இளைஞர் அஜித் கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்..!!

திருப்புவனம் இளைஞர் அஜித் கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே பிரசித்திபெற்ற மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு கோயில் தற்காலிக ஊழியராக  அதே பகுதியைச் சேர்ந்த அஜித் (29)  என்ற இளைஞர் பணியாற்றி வந்துள்ளார்.  இந்நிலையில் திருமங்கலத்தைச் சேர்ந்த சிவகாமி (73)என்பவர்,  கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 27) என்று  தனது மகளுடன் தரிசனம் செய்ய வந்திருந்தார்.  சிவகாமியால் நடக்க முடியாது என்பதால்,  கோயில் ஊழியரான அஜித்  வீல்சேர் கொண்டு வந்து கொடுத்துள்ளார். அப்போது சிவகாமியின் மகள், கார் சாவியை அஜித்திடம் கொடுத்த காரை பார்க் செய்து வருமாறு கூறியுள்ளார்.   

ஆனால் , அஜித்திற்கு கார் ஓட்ட தெரியாததால் அருகில்  இருந்தவரிடம் கூறி காரை பார்க் செய்துவிட்டு சாவியை எடுத்துவந்து சிவகாமியின் மகளிடம் கொடுத்துள்ளார். இதையடுத்து சாமி தரிசனம் முடிந்து காரில் புறப்பட்ட போது காரின் பின் சீட்டில் கட்டைப்பையின் அடியில் வைத்திருந்த பத்து சவரன் தங்க நகைகள்  காணாமல்போயுள்ளது.  இதனையடுத்து  சிவகாமி அஜித்திடம் விசாரித்திருக்கிறார். அப்போது அஜித் உரிய பதில் அளிக்கவில்லை  என கூறப்படுகிறது.

govt

இதனையடுத்து சிவகாமி திருப்புவனம் காவல்துறையில் புகார் அளித்தார்.  அதன்பேரில் போலீசார் அஜித் உள்ளிட்ட அவரது நண்பர்கள் 5 பேரிடம்  விசாரணை செய்துள்ளனர்.  அஜித்திடம் விசாரணை மேற்கொண்டிருந்த போது  திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனே அவரை மீட்டு  திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதித்தனர். உடனடியாக மருத்துவர்கள் பரிசோதனை செய்து,  அஜித் ஏற்கனவே  உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.  இதனையடுத்து அஜித்தின் உடல் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. 

 விசாரணையின் போது அஜித் துன்புறுத்தப்பட்டதாகக் கூறி, அவரது உறவினர்கள்  போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  அத்துடன் இளைஞர் அஜித்தில் லாக்கப்பில் அடித்துக் கொலை செய்யப்பட்டதாகவும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன.  இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக திருப்புவனம் காவல்நிலையத்தில் பணிபுரிந்த குற்றப்பிரிவு தனிப்படை காவலர்கள் 6 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.  அதன்படி தொடர்ந்து காவலர்கள் கண்ணன், பிரபு, சங்கர மணிகண்டன், ராஜா, ஆனந்த், ராமச்சந்திரன் உள்ளிட்ட 6 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.  இந்நிலையில் இளைஞர் அஜித் கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.