பாக்யராஜ் மரணம் - அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ் இரங்கல்..!

 
1

பாக்யராஜின் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். எம்ஜிஆரின் மீது பேரன்பு கொண்டிருந்தவர். தன்னிகரற்ற திரைக்கதை ஆசிரியர் பாக்யராஜ். பாக்யராஜின் குடும்பத்திற்கும், திரையுலகிற்கும் எனது ஆழ்ந்த இரங்கல் என்று எடப்பாடி பழனிச்சாமி பதிவிட்டுள்ளர்.

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், "இந்திய திரையுலகின் தன்னிகரற்ற திரைக்கதை ஆசிரியர் என்ற பெருமைக்குரிய அவர் மறைவு என்பது ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பதாருக்கும், திரைத் துறையினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மறைந்த அவர் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.