அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் உறுப்பினர் சேர்க்கையை துரிதப்படுத்த அறிவுரை

 
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் உறுப்பினர் சேர்க்கையை துரிதப்படுத்த அறிவுரை

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.

இதுதொடர்பாக அதிமுக தலைமை கழகம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி K. பழனிசாமி தலைமையில், தலைமைக் கழகம் - புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் இன்று மாலை (17.05.2023 புதன் கிழமை), மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

மாவட்டக் கழகச் செயலாளர்களும், பிற மாநிலக் கழகச் செயலாளர்களும் கலந்துகொண்ட இக்கூட்டத்தில், கழகத்தில் ஏற்கெனவே உறுப்பினர்களாக பணிகளை துரிதப்படுத்துவது குறித்தும் வருகின்ற 20.8.2023 அன்று மதுரையில் இருப்பவர்களின் பதிவை புதுப்பித்தல் மற்றும் புதிய உறுப்பினர்களை சேர்த்தலுக்கான நடைபெற உள்ள கழக மாநாட்டை எழுச்சியுடன் நடத்துவது குறித்தும் கழகப் பணிகளை விரைந்து ஆற்றுவது குறித்தும் கழகப் பொதுச் செயலாளர், மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் விரிவாக ஆலோசனை வழங்கினார்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.