அதிமுக தொகுதிப் பங்கீட்டு குழு இன்று ஆலோசனை

 
admk

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தேர்தல் பணிகளை தொகுதிப் பங்கீட்டுக் குழு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, தேர்தல் பிரச்சாரக் குழு, தேர்தல் விளம்பரக் குழு ஆகிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

admk office

தொகுதிப் பங்கீட்டுக் குழு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக கே.பி.முனுசாமி, M.L.A., அவர்கள், கழக துணைப் பொதுச் செயலாளர் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் C. சீனிவாசன், M.L.A., அவர்கள் கழகப் பொருளாளர் திண்டுக்கல் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர், பி. தங்கமணி, M.L.A., அவர்கள் கழக அமைப்புச் செயலாளர் நாமக்கல் மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர் 4. திரு. S.P. வேலுமணி, M.L.A., அவர்கள் கழக தலைமை நிலையச் செயலாளர் கோவை புறநகர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர், முன்னாள் அமைச்சர் திரு. பா. பென்ஜமின் அவர்கள் கழக அமைப்புச் செயலாளர் திருவள்ளூர் மத்திய மாவட்டக் கழகச் செயலாளர், முன்னாள் அமைச்சர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

kp munusamy

இந்நிலையில் சென்னை ராயப்பேட்டை அலுவலகத்தில் அதிமுக தொகுதிப் பங்கீடு குழு இன்று (ஜன.29) கூடுகிறது. நாடாளுமன்றத் தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி தலைமையிலான குழு இன்று ஆலோசிக்கிறது.