இன்று முதல் அக்னி நட்சத்திரம் துவங்குகிறது..!இந்த காலத்தில் செய்ய வேண்டிதும், செய்யக் கூடாது என்ன தெரியுமா?
அக்னி நட்சத்திரம் இன்று மே 4ம் தேதி தொடங்கி மே 28ம் தேதி வரை வர உள்ளது. இந்த காலகட்டத்தில் நாம் செய்ய வேண்டியவை, செய்யக் கூடாத முக்கிய விஷயங்கள் என்ன என்பதை இங்கு பார்ப்போம்.
தமிழகத்தில் மார்ச் மாதமே பல இடங்களில் 100 டிகிரி வெயில் அடித்தது. இதே நிலை ஏப்ரல் மாதத்தில் மிகவும் கடுமையாக மாறியது.தமிழகத்தின் பல மாவட்டங்கள் வெப்பத்தின் கோரபிடியில் சிக்கியுள்ளனர்.இந்நிலையில், கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் இன்று தொடங்கி மே 28 வரை நீடிக்கிறது.
இந்த நாட்களில் கடுமையான வெயில் அடிக்கும் என்று கருத்தப்படுகிறது. மேலும் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் சில இடங்களில் வெப்ப சலனத்தின் காரணமாக மழைப்பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
செய்யக் கூடாதவை:
அக்னி நட்சத்திர நாட்களில் நாம் எந்த ஒரு செடி கொடிகளை அழிக்காமல், மரங்களை வெட்டக் கூடாது.
அதுமட்டுமல்லாமல் நார் உரிக்கவோ, விதை விதைக்கவோ கூடாது.
நல்ல விஷயங்களான கிணறு, குளம் வெட்டுதல், தோட்டங்கள் அமைத்தலும் கூடாது. நிலம் மற்றும் வீடுகளுக்குப் புதிதாக பராமரிப்பு செய்ய வேண்டாம். குறிப்பாக நெடுந்தூரம் வாகனங்களில் பயணம் செய்யக் கூடாது. அதிகளவு வெப்பம் நிலவுவதால், நாம் எண்ணியதை விட வேகமாக நம் உடலின் ஆற்றல் குறைவது, சோர்வடைதல், வலுவிழத்தல் நடக்கும் நாட்கள் இது. இதனால் அதிக நேரம் வெயிலில் இருக்கும் போது அது உயிருக்கே பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
செய்ய வேண்டியவை:
ஆலயங்களுக்கு செல்வதும், இந்த உலகத்திற்கே உணவளிக்கும் இறைவனுக்கு அபிஷேக, ஆராதனை நடத்துவது மிக நல்ல பலனை தரும். குறைவில்லாமல் தான - தர்மங்களை செய்யலாம்.
இந்த காலத்தில் தண்ணீர் பந்தல், மோர் பந்தல் அமைக்க இறைவனின் அருள் பெற சிறந்த வழி. முடிந்தால் நோயாளிகளூக்கு இளநீர் தருவதும் நல்லது.
ஏழைகளுக்கும், மாற்று திறனாளிகளுக்கு குடைகள், காலணிகளை வழங்குவதும், தயிர் சாதம் வழங்குவதும் மிக சிறந்த புண்ணியத்தைப் பெற்று தரும். ஒருவர் மன நிறைவு அடைவது நீர் அருந்திய பின்னரும், உணவருந்திய பின்னரும் தான். நீங்கள் செய்யும் தண்ணீர் பந்தல், உணவளித்தல் பின்னர் ஒருவர் மகிழ்ந்தாலே இறைவனின் அருள் கிடைத்து விடும்.
அந்தணர்களுக்கு விசிறி தானம் செய்யலாம்.
கோடைக் காலத்தில் கிராமங்களில் உள்ள அம்மன் கோயிலில் திருவிழாவும், கூல் ஊற்றுதல் நிகழ்வுகளை நடத்தி வந்தனர்.
கோடைக் காலத்தில் வெயிலின் கொடுமையிலிருந்து தப்பிக்க அம்மனுக்கு அபிஷேக ஆராதனை செய்வதும், பானகம் வழங்குதல் செய்து வந்தனர். அதோடு கூல் ஊற்றுவதால் கோடைக்காலத்தில் உடல் சக்தியைப் பெறவும், நோய் கிருமிகளை அழிக்க மஞ்சள் தெளித்தலும், வேப்பிலை வீட்டின் முன் கட்டுதல் போன்ற செயல்களை செய்து வந்தனர். இன்றும் செய்து வருகின்றனர்.
அக்னி நட்சத்திர காலத்தில் சூரியனுக்கு உரிய மாக்கோலத்தை பூஜை அறையில் காலையில் ஒரு பலகையின் மீது போட்டு, 21 முறை சூரிய காயத்திரி மந்திரத்தை ஜெபிக்கவும்.
ஓம் அஸ்வத் வஜாய வித்மஹே
பாஸ ஹஸ்தாய தீமஹி
தந்தோ சூர்ய ப்ரசோதயாத்


