Attentionநோய்_அண்ணாமலை... நல்ல கண்ணாடி வாங்கி தருகிறோம்- அதிமுக

 
eps

தன் மீது அரசியல் வெளிச்சம் எப்படியாவது பாய்ந்து விடாதா என்ற அற்ப எண்ணத்தில் அஇஅதிமுகவை பாஜக மாநில தலைவர் தொடர்ந்து சீண்டிவருவதாக அதிமுக சாடியுள்ளது.

அட்டாக்' அண்ணாமலை... `மதிக்காத' எடப்பாடி - தீராத பாஜக, அதிமுக பஞ்சாயத்து! |  What's happening in AIADMK - BJP alliance after annamalai press meet -  Vikatan

இதுதொடர்பாக அதிமுகவின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில், “தாங்கள் ஆட்சியில் இருக்கும் மத்திய அரசிடமிருந்து தமிழ்நாட்டு மக்களுக்கான நலத்திட்டங்கள் பெற்று, மாநில உரிமைகளை நிலைநாட்டி நேர்மறை அரசியல் செய்ய வக்கற்ற அரசியல் தற்குறி அண்ணாமலை, தன் மீது அரசியல் வெளிச்சம் எப்படியாவது பாய்ந்து விடாதா என்ற அற்ப எண்ணத்தில் அஇஅதிமுகவை தொடர்ந்து சீண்டிவருகிறார்- விண்மீனைக் கண்டு வீதியில் இருப்பதெல்லாம் கத்துவது போல......


நம் கழகக் கோயிலாம் எம்ஜிஆர் மாளிகை கழகத் தொண்டர்களின் உள்ளம்போல் வெள்ளை நிறத்தில் இருப்பதால் காகிதம் என்று நினைத்துக்கொண்டு அரித்துவிடத் துடிக்கும் அரசியல் கரையானுக்கு தெரிந்திருக்கவில்லை- நம் ஒற்றுமையும் பலமும் கொள்கைப் பிடிப்பும் இரும்பினும் வலியது என்று! கழகத்திற்காகவும் தமிழ்நாட்டு மக்களுக்காகவும் நாங்கள் எடுத்த முடிவு எதிரிகளுக்கு நம்பிக்கை துரோகமாகத் தெரிந்தால், எதிரிகளுக்கு நாங்கள் அப்படியே இருப்பதில் மகிழ்ச்சியே!

மேல பாஸ் இருக்கும் போது.. இவர் யாருங்க.." அண்ணாமலை குறித்து கேட்டதும்..  டென்ஷனாகி சீறிய எடப்பாடி | Modi is Boss for BJP dont speak about Annamalai  says ADMK Edappadi ...

கழகம் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதன் காரணங்கள் தெளிவாக அறிக்கையில் கூறப்பட்டிருப்பதும், அது இன்றைக்கு நிரூபிக்கப்பட்டிருப்பதும் நுனிப்புல் மேயும் அறிவிலிகளுக்கு புரிந்திருக்க வாய்ப்பில்லை தான். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்த அதிமுகவின் அக்கறை மிகுந்த முன்னெடுப்புகளின் நோக்கம் பாராமல் சிறுமைப்படுத்தத் துடிக்கும் அண்ணாமலை அவர்களே- எங்களுக்கு மக்கள் நலன் தான் பெரிது! அதை நிறைவேற்றும் நோக்கத்துடனான பயணம் தான் பெரிது! 

(பி.கு: நல்ல நிலைக்கண்ணாடி வேண்டுமானால் வாங்கித் தருகிறோம். அதன் மூலம் உங்கள் கட்சியை, அதான்- அந்த நான்கு பேரை மீண்டும் மீண்டும் "எண்ணிப் பாருங்கள்"!)” எனக் குறிப்பிட்டுள்ளது.