“ஆர்எஸ்எஸ் விழாவில் பங்கேற்கவில்லை”- எஸ்.பி. வேலுமணி விளக்கம்

 
sp velumani sp velumani

பேரூர் ஆதீனம் சாந்தலிங்க ராமசாமி அடிகளார் நூற்றாண்டு விழாவில் பங்கேற்பதற்கு சென்றதாகவும், ஆர்எஸ்எஸ் விழாவில் பங்கேற்க செல்லவில்லை எனவும் முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி விளக்கம் அளித்தார்.

கோவை விமான நிலையத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது  பேசிய அவர், “சிறுவாணி அணையில் அதிமுக ஆட்சியில்  50 அடி தண்ணீர் தூக்கப்பட்டது. கேரளாவில் ஏற்பட்ட நிலச்சரிவுக்கு பின்னர் அணை நீர்மட்டத்தை குறைத்தனர். இப்போது சிறுவாணி தண்ணீர்  40 அடிக்கு மேல் தண்ணீர் வைப்பது இல்லை. சிறுவாணி அணையில்  50 அடிக்கு உடனடியாக தண்ணீர் வைக்க வேண்டும், அடிக்கடி தண்ணீர் திறந்து விடுவதை நிறுத்த வேண்டும். இல்லையெனில் 10 நாட்களில் போராட்டம் நடத்தப்படும்.

Image

பேரூர் ஆதீனத்தில் நடைபெற்றது கொங்கு மண்டலத்திற்கு பெருமை சேர்க்கும் நிகழ்ச்சி. பேரூர் ஆதீனம் சாந்தலிங்க ராமசமி  அடிகளார் நூற்றாண்டு நிகழ்விற்குதான் சென்றோம். வருடா வருடம் சாந்தலிங்க அடிகளார் ஜீவசமாதி அடைந்த நிகழ்வில் பங்கேற்பது வழக்கம். எங்களுக்கு அதில் பங்கேற்க தான் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு எங்களை கூப்பிட மாட்டார்கள். நாங்களும் பங்கேற்க மாட்டோம். எங்களை அழைத்தது சாந்தலிங்க  ராமசாமி அடிகளார் நூற்றாண்டு விழாவிற்கு தான். ஆனால்  ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதாக தகவல் பரப்பபடுகின்றது. மடத்தில் நடந்த நூற்றாண்டு விழாவிற்கு தான் சென்றோம். ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை.அடிகளாரின் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக மோகன் பகவத் அழைக்கப்பட்டார். அது என்னுடைய தொகுதி என்பதால் அவருக்கு முருகன் சிலை, வேல் போன்றவை பரிசாக வழங்கப்பட்டது. ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு நம்மை யாரும் அழைக்க மாட்டார்கள், திமுகவிற்கு மக்கள் முழுமையாக எதிர்ப்பாகி விட்டனர். அதை மறைக்க சாதரணமாக ஒரு மகான் நிகழ்விற்கு செல்வதை இப்படி திரித்து சொல்கின்றனர்,  இது மனசாட்சி இல்லாதவர்கள் செய்கின்ற வேலை. இந்த அரசு மக்களிடம் தோல்வி அடைந்து விட்டது என்பதால், எதையாவது பேசி திசை திருப்பலாம் என பார்க்கின்றனர். நாங்கள் ஒரு நிகழ்ச்சிக்கு சென்றால் வேறு நிகழ்ச்சிக்கு சென்றதாக அதை திசை திருப்புகின்றனர்” என விளக்கம் அளித்தார்.